டிசம்பர் 31, 2008

நவம்பர் 11, 2008

ஒன்னுமே புரியலே இலங்கையிலே

ஒன்னுமே புரியலே இலங்கையிலே
என்னமோ நடக்குது …..


என்னன்னு கீழே பாருங்க .....

பெரிதாக்கி பார்க்க படத்தை கிளிக்கவும்





இங்க சனம் திருந்துர மாதிரியும் தெரியல…
இந்த சணடை நிக்குமுன்னும் தோணலை.

நவம்பர் 10, 2008

அந்த அழியாத கோலங்கள்

நேற்று வீட்டில் பழைய புத்தகங்கள் பைல்களை புரட்டிக்கொண்டிருந்தேன், ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்றைத்தேடி…. அப்பொது கிடைத்து தான் கீழேயிருக்கும் கிறுக்கல்.

என் நண்பண் ஒருவனுக்காக அவன் கடலை போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கொடுக்க எழுதியது….

முற்றுமுழுதாக தமிழ் திரைப்படங்களின் பெயர்களை மட்டும் கொண்டு ஒரு கவிதை என்று சொல்லி கிறுக்கியது. இப்போது அவன் அந்த பெண்ணையே திருமணம் செய்து செட்டிலாகி விட்டான் குழந்தை குட்டிகளோடு.

மகிழ்ச்சி சந்தோஷம் விளையாட்டுதனம் மட்டுமே நிறைந்த அந்த இளமைபருவ காலம் கோடி கொடுத்தாலும் ஈடு இணையாகாது.

இதோ கிறுகக்ல், பார்த்துவிட்டு நீங்களும் ஏதாவது கிறுக்கிட்டு போங்க


அன்பே!

சிவகாமியின் செல்வன் - உன்
புன்னகை மன்னன்
நான் பாடும் பாடல் - என்றும்
“புதுக்கவிதை” –

என் காதலை
சொல்லத்தான் நினைக்கிறேன் - தினம்
ஒன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
இப்போது….
வைகாசி பொறந்தாச்சு –

ஆகவே...
தென்றலே என்னை தொடு
கண்ணே கனியமுதே! – நீ
நிறம் மாறாத பூக்கள்
ஆலயமணி
குங்குமச்சிமிழ்
கீதாஞ்சலி
சிட்டுக்குருவி
சிந்து பைரவி
சிவப்பு ரோஜா
புதுப்பாட்டு - அப்பப்பா !. . . . .

நினைத்தாலே இனிக்கும்.

கேளடி கண்மணி - அந்த
16 வயதினிலே
அம்மன் கோவில் கிழக்காலே
டார்லிங்! டார்லிங்! – படத்திலே
உன்னை நான் சந்தித்தேன்

அன்றுதான் எனக்கு
முதல் வசந்தம்

உன்,
பருவ மழை -கண்டு
புதுப்புது அர்த்தங்கள் -கொண்டு
நான் பாடிய
இதய கீதம்
புதிய ராகம்
வருஷம் 16 – போனாலும்
கடலோரக்கவிதையாய்
காற்றினிலே வரும் கீத(ம்)மாய் - வந்து
மண் வாசணை வீசும்

அடியே!
அன்னக்கிளி
ரோசாப்பு ரவிக்கைக்காரி
மீரா!...

உயிரே உனக்காக - என்றாய்

மாதங்கள் ஏ(ழு)ழில் - நம் காதல்
இருகோடுகள் - ஆனதென்ன

என் வாழ்வு உன்னோடு தான்- என்றாயே!
திசைமாறிய பறவை யாய் போனாயே
ஏன் ஏன்?

அரண்மணைக்கிளியே
பார் மகளே பார்
வசந்த மாளிகையை

இப்போது உன்
பூ விலங்கு
நாயகன்
சுவரில்லாத சித்திரங்கள்
பாலைவன ரோஜா
மூன்றாம் பிறை

வாழ்கை – இப்போது எனக்கு
புரியாத புதிர் –
பகலில் ஓர் இரவு

ஆகா!
அந்த 47 நாட்கள் - என்றும்
அழியாத கோலங்கள்

நவம்பர் 08, 2008

சிரிக்கலாம் வாங்க! (எ)

- உங்கள் கணவர் குறட்டை விடுபவரா? மனைவிகள் ஜாக்கிரதை!












வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

நவம்பர் 06, 2008

மலையகம்

இன்றைய நாட்களிலும்,பொதுவாக 80களின் பின்னரும் உலக அரங்கில் இலங்கை என்றால் முதன்மை நிலை பெறுவது தமிழர் பிச்சினை தான். அதிலும் விடுதலைப்புலிகள்,தமிழர் போராட்டம் பற்றிதான் தான்.

ஆனால் இப்போது தான் இலங்கையில் இன்னொரு சமூகம் தமிழை தாய்மொழியாக கொண்டாலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து விட்டு தான் மட்டும் கூனி குறுகி நிற்கிற அல்லது கைவிடப்பட்ட அல்லது காட்டிக்கொடுக்கபட்ட அவல நிலை பற்றி உலகிற்கு தெரிய வர ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக இறக்குவானை நிர்ஷன் புதிய மலையகம் என்ற தலைப்பில் தரும் மலையகம் அதன் மக்கள், அவர்கள் வாழ்கை, பற்றிய விடயங்கள் நிச்சயம் மலையகம் சாராத தமிழர்கள் உலகத்தின் எந்த பகுதியிலிருந்தாலும் தெரியவே வாய்பில்லை.

பதிவுகளை பார்க்க புதிய மலையகம் செல்லவும்.

இது பெரும் மகிழ்சிக்கும் போற்றுதலுக்கும் உரிய விடயம். சமூகம் விட்டு விடுதலையடைய விதைக்கபடுகிற விதை. அல்லது சமூக மேம்பாட்டிற்கான மற்றுமோர் கல். இதற்கு தமிழ் வலைபூக்கள் பெரும் பங்களிப்பை செய்வது மறுக்கமுடியாதது.

இதில் அநேகர் தம் பங்களிப்புகளை உலகத்தின் பார்வைக்கு வைப்பதால், இருளில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தின் அவலம் வெளிச்சத்திற்கு வருகிறது. இனி வரும் காலங்களில் இம்மக்களின் வாழ்வுயர அவர்களின் முகவரி தேடி வெளிச்ச ரேகைகள் வரவிருக்கிறது என்பதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இதற்கு கோடு போடவர்களுக்கும் அதை பாதையாக மாற்றியவர்களுக்கும் அதையே இப்போது ரோடாக மாற்றியவர்களுக்கும் வரும் காலங்களில் இதை நெடுஞ்சாலையாக்க போகிறவர்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துகளும்.

நம் பிரச்சினைகளை பேசுகிறோம் அவலங்களை முன் வைக்கிறோம் என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பேசுவோம்.

முதலில் நமது சமூகம் எப்படி விடுதலைபெறலாம் என்பதை பற்றி கொஞ்சம் கோடு போடலாம் இதில் அநேக விடயங்கள் தவிர்க்க முடியாத படி ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்திருக்கின்றன, ஒன்றை விட்டு ஒன்றை தீர்க்கமுடியாத பெரும் சிக்கல்கள் இருக்கின்றன என்பது மறக்கமுடியாது.

என் அறிவிற்கு எட்டியவரையில் எனக்கு தெரிந்தவைகளை என்ன செய்யலாம் என்று ஒவ்வொன்றாக எழுத முனைகிறேன். நம் மக்களின் சமூக அக்கறையுள்ளவர்கள் மற்றும் தலைவர்கள் கண்களில் பட்டால் கொஞ்சம் விவாதித்து பாருங்கள்.

முதலில் இம்மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரப்படத்தபடுல் முக்கியம்.
மலையக மக்கள் அனைவருமே பெருந்தோட்ட பயிர்செய்கை பிரிவில் அடங்குகிறவர்கள், தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களில் தான் பணிபுரிகிறார்கள். இவர்களது ஊதியம் அதாவது வருவாய் என்பது ஒரு நிரந்தரமற்றது. வேலைக்கு போனால் சம்பளம் இல்லையேல் இல்லை என்ற நிலை.

பெருந்தோட்ட தொழிற்துறை அரசாங்கத்தின் கைகளில் இருந்த காலத்தில் இம்மக்கள் பொருளாதார நிலையில் தன்னிறைவை எட்டாவிட்டாலும், இல்லை என்ற சொல்லிற்கு இடமில்லாது வாழ்ந்தார்கள். அந்த காலங்களில் அதாவது 80களின் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தை சற்று நிறுத்தி, தம்மை திரும்பி பார்க்க வைக்ககூடிய நிலையில் இச்சமூகம் இருந்தது என்றால் மிகையில்லை. நடந்த போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்பன இதற்கு சான்றாகும்.

இதன் காரணமாக அன்றைய அரசியல் இவர்கள் வாழ்கையில் விளையாட தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்கையை அவர்களது திட்டத்தை ஆட்டி பார்க்க திட்டமிடப்பட்டது. இத்தனைக்கும் இலங்கை உலகிலேயே தேயிலை ஏற்றுமதியில் முதன்மை நாடாக திகழ்ந்தது மேலும் இலங்கை தேயிலைக்கு தான் உலக சந்தையில் நல்ல விலை கிடைத்திருந்தும்.

83ல் இடம் பெற்ற இலங்கையின் இனக்கலவரத்தில் தென் மாகாணம், ஊவா மற்றும் சப்பிரகமுவா மாகணத்தில் பெருந்தோட்ட துறையில் இருந்த தொழிலாளர்கள் அநேகர் கொலைசெய்யப்பட்டார்கள், விரட்டியடிக்க பட்டார்கள் அல்லது இடம்பெயர சூழ்நிலையால் நிர்பந்திக்கபட்டார்கள். தோட்ட உரிமையாளர்கள் தமிழராய் இருந்தபட்சத்தில் மொத்தமும் சூரையாடப்பட்டது.

இலங்கை அரசின் பொருளாதாரம் தேயிலை ஏற்றிமதியில் தங்கியிருக்க கூடாது, என்ற கருத்து அப்போதே இலங்கையில் ஆளும்வர்க்கத்தினருக்கு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக தேயிலை தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது…. அநேக தோட்டங்கள் மூடப்பட்டன.

பெருந்தோட்டங்களில் ஒவ்வோர் தோட்டத்திலும் அதன் விளைநில பரப்பளவிற்கு தகுந்த விகிதாசாரத்தில் தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை, அப்போது தான் அங்குள்ள மக்களுக்கு மாதம் முழுவதுமாக (அதாவது 26 நாட்களும்) வேலை பார்க்க கூடிய நிலையிருக்கும். தொழிளாளர் அளவு அதிகம் ஆகும் போது அனைவருக்கும் மாதம் முழுதும் வேலை தருதல் என்பது இயலாத ஒன்றாகிறது…. தினக்கூலி என்ற அடிப்படையில் அம்மக்கள் இருக்கும் போது மாதத்தில் வேலை நாட்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது இங்கு சொல்லித்தெரிய தேவையில்லை.

ஆக இந்த நிலை அங்குள்ள நிர்வாகத்திற்கு மிகுந்த சாதகமாக மக்களை பிரித்தாளுவது என்ற ஒரு உந்து சக்தியை கொடுக்கிறது. இந்த வகையில் தோட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் சுதந்திரம் உரிமை என்பது முற்று முழுதாக அடகு வைக்கப்படுகிறது.

மேலும் தனியார் மயப்படுத்திய பின்னர் சிறந்த முகாமைத்துவம் மறுசீர் அமைப்பு என்பன துளியும் அற்று போய்விட்டன. மேலும் தனியார் மயப்பட்ட தோட்டங்களில் தேயிலை தவிர்ந்த மாற்று பயிர்களை தேயிலை விளை நிலங்களில் பயிர் செய்வது என்ற புதிய உத்தி கையாளப்பட்டது. ஆகவே இதனாலும் அந்தந்த தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் மொத்த வேலை நாட்கள் குறையும்.

ஆக அம்மக்களின் தொடர் வருவாய் ஆட்டம் கண்டு விடும். ஆக வாழ்வியல் போராட்டத்திற்கு மத்தியில் மறுமலர்ச்சி பற்றி எப்படி ஒரு சமூகம் சிந்திக்கும்?

அதை சிறப்புற செய்து முடித்திருக்கிறது இலங்கையின் ஆளும் வர்க்கம். அதில் பெரும் சோகம் என்ன வென்றால் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் சங்கங்களும் விலை போனது தான் சோகத்தின் உச்சம்.

ஒன்றாக இருந்த தொழிற்சங்கங்கள் துண்டாடப்பட்டன. (இது வேறு கதை இதை வேறாக எழுதலாம்). போதாதற்கு அதற்குள் எத்தனை பிரிவுகள் கட்சிகள் அதற்குள் எத்தனை போட்டிகள் பொறாமைகள், தமிழினத்திற்கே சாபமாய் போன ஓற்றுமையின்மை இத்தியாதி இத்தியாதி.

என்ன செய்யலாம்?

முதலில் இம்மக்களின் ஊதியம் நிரந்தரப்படுத்தப்படல் அவசியம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் ஸ்திரபட்ட வருவாய் என்கிற முதல் அம்சத்திற்கான வழிதிட்டங்கள் வகுக்கபடுதல் அவசியம்.

தொடரும்.......!

நவம்பர் 05, 2008

மாற்றம் வருகிறது.

பூமி பந்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்று போற்றப்படுவதும், வாய்புகளின் இருப்பிடம் என்று கூறப்படுவதுமான அமெரிக்காவில் இன்று ஓரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது… எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் இது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக திரு. பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்,

அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை., அமெரிக்க வெள்ளை இனத்தவர் மத்தியில் ( பரவலாக இல்லாவிட்டாலும் அது தான் உண்மை) ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர சமூகமாக கருதப்படும் ஒரு சமூகத்திலிருந்து அந்நாட்டை 21ம்நூற்றாண்டின்; பாதையில் நடத்தி செல்ல ஒரு தலைவனை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரை நான் 90 களில் பார்த்திருக்கிறேன் ROOTS (வேர்கள்)என்று.
எப்படி ஆபிரிக்க கறுப்பினத்தவாகள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன என்ன, பின்னாளில் இவற்றிலிருந்து எப்படி இம்மக்கள் விடுதலை ஆனார்கள், எவ்வாறு அந்நாட்டின் குடிகளானார்கள் என்று இருக்கும்.

இவ்வாறு நிற வெறியினால் பீடிக்கப்படடு இருந்த அமெரிக்கர்கள் இன்று நிறம், மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து இன்று ஒன்று பட்டு நிற்பதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் ஒடுக்கப்பட்ட சமூகம் எங்கும் எந்த காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழாது என்பதாகும்.

இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி ஆரவாரம் என்பவற்றை பார்க்கும் போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. அதே நேரம் மனசுக்குள் சற்று பயமாகவும் இருக்கிறது. இவ்வாறாக காட்டப்படும் பெரும் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொள்ளும் கயவர்களும் பாதகர்களும் இருப்பார்கள், மாற்றம் கொண்டுவர மாறுதலாய் வந்த நிற்கும் இம் மனிதனுக்கு இவர்களால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று.

ஏனெனில் பழைய அமெரிக்க வரலாறுகளை எடுத்து பார்த்தால் நல்ல ஆட்சியாளர்களை அந்த நாடு நெடுநாட்கள் கொண்டிருந்ததில்லை.

ஏற்கனவே செய்திகளில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டார்கள் என்று கூறி இருவரை கை செய்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன் பி.பி.சி செய்திகளில் சொல்லப்பட்டது. அதற்கு பின் அந்த செய்தி அப்படியே இல்லாது போய்விட்டது.

எந்த தொந்தரவுகளும் ஆபத்துகளும் நேராது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்கவும், ஒடுக்கபட்ட சமூகம் என்ற பெயரில் இருந்த ஒரு இனம் புதிய யுகம் காணவும், அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவும் வாழ்த்தி நிற்போம்.!

நகைச்சுவை

ஒரு சிறு மாறுதலுக்காக படித்ததில் சுவைத்ததை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்
முத்துகமலம் என்ற இணையதளத்தில் நகைச்சுவை பகுதியில் படித்தது.

நன்றி தேனி.எஸ்.மாரியப்பன் - இணையத்திற்கு செல்ல




தபால்காரர் போயிட்டாரா...?

ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர்,
"உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்த தபால்காரர்,

"ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.

அக்டோபர் 28, 2008

இதுவரை போட்ட கணக்கு

வழக்கமாக செய்திகள் தொகுத்து தரும் முறையை விட நான் ஒரு புது முறையை முயற்சித்திருக்கிறேன்
பாருங்கள்

படத்தை சொடுக்கவும்:




கேள்வி
தமிழகமெங்கும் இருந்து சேகரிக்கப்படும் பொருட்கள் உதவிகள் எல்லாம் உண்மையிலேயே அந்த மக்கள் துயர் துடைக்குமா?

அல்லது நாங்கள் பொருட்களை விநியோகிக்கும் போது விடுதலைப்புலிகள் அந்த பொருட்களை கடத்திக்கொண்டுபோய் விடுகிறார்கள், ஆகவே சீராக விநியோகிக்க முடியவில்லை என்று சொல்லி இலங்கை ராணுவம் இடைநிறுத்தி விடுமா?

அல்லது எல்லாவற்றிகும் மேலாக! பொருட்கள் வந்து சேரும் முன்னரே வடபகுதியில் முழு தமிழனும் அழிக்கபட்டு விட்டுவானா?

அக்டோபர் 27, 2008

இனிய தீபாவளி நல் வாழ்துகள்.

தரணியெங்கும்
தழைத்து நிற்கும்
அனைத்து வலைபதிவர்கள்
மற்றும் வலை திரட்டிகள், நிர்வாகிகள்
அனைவருக்கும்

எனது
இனிய தீபாவளி நல் வாழ்துகள்


அக்டோபர் 26, 2008

வாழ்த்து!

அக்டோபர் 23, 2008

ஈழம்


இன்றைய தேதியில் நம்மிடையே எல்லா செய்திகளையும் பின் தள்ளி எல்லாரிரடமும் முதலில் வந்து நிற்பது ஈழமும் ஈழத்தமிழரின் துயரமும் தான்.

உலக செய்திகளில் இந்த செய்திகள் பத்தோடு பதினொன்று தான்.

சர்வதேச அளவில் எல்லோராலும் பார்க்கப்படுகிற அல்லது அது தான் உண்மையானது என்ற ஒரு எண்ணபாட்டை ஏற்படுத்தவல்லதாக இருக்கிற அல்லது அப்படி இருப்பதாக காட்டப்படுகிற பிபிசி சீஎன்என் அல்ஜெசீரா போன்ற செய்திகளில் இலங்கைத்தமிழர் நிலை பத்தோடு பதினொன்றாக கூட இல்லை.

தமிழகத்திலும் மற்றும் தமிழர் எங்கெங்கு புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ அவர்களிடத்திலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் தான் முழு வீச்சுடன் இருக்கிறது.

தமிழகத்திலும் கூட ஈழத்தமிழர் பற்றிய அந்த குறுந்தகட்டுக்கு பின்னர் தான் அதுவும் தமிழக முதல்வர் திரு கலைஞர் அவர்கள் அந்த குறுந்தகட்டை பார்த்து, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை குமுதம் ரிப்போட்டர் எழுதியதை பார்த்த பின்னர் தான் தமிழக மக்களுக்கு உறைத்திருக்கிறது. உறைத்திருக்கிறது என்று கூற முடியாவிட்டாலும் இலங்கை தமிழனுக்கான ஆதரவை வழங்குவதிலிருந்த அரசியல் சார்ந்த பயம் நீங்கியிருக்கிறது….

விளைவு

தமிழர் அனுதாபம் சுனாமி போல் எழுந்து விட்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் உடனே காத்திரமான ஒரு தலையீட்டை காட்ட தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்திக்கிற அளவிற்கு போயிருக்கிறது. இவ்ளவு நாள் இந்த அளவு முழு வீச்சை இதில் தமிழகம் காட்டவில்லையே. அதாவது தற்போது நடக்கிற யுத்தம் தொடங்கி ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகின்றன அப்போதெல்லாம் நாம் எங்கிருந்தோம், நமக்கு தெரியாதா?. சீடி வந்து தான் நமக்கு தெரியுமா?.

எது எவ்வாறாயினும் இப்போததைய இந்த அலை எந்தவொரு சுயலாபத்தையோ, அரசியல் லாபத்தையோ கருத்தில் கொள்ளாது உண்மையில் இருதய சுத்தியோடு இலங்கை தமிழரின் ஏறக்குறைய 30 ஆண்டுகால பரிதவிப்புக்கும், தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும், மரணங்ளுக்கும், வாழ்வியல் விடிவிற்கு வழிவகுத்தால் உண்மையில் இத்தருணம் வரலாற்றில் குறிக்கப்படும் என்பது உண்மை.

இப்பதிவை எழுத வந்த நோக்கம் என்ன வென்றால் எல்லாரும் அவலங்களையும், பிரச்சினைகளையும் மட்டும் பேசுகிறோம், இதற்கான தீர்வு என்ன எனபது பற்றியும் அவர் அவர் கருத்துகளையும் கூறினால் நல்லதாக இருக்கும் என் எண்ணுகிறேன்.

அதற்காக தான் சொன்ன அல்லது சொல்கிற கருத்துகளை தான் மற்றவர்கள் ஏற்கனும், அது தான் சரி இது தான் சரி என்று நமக்குள் ஒரு சண்டை தேவையில்லை.

இது பிரச்சினையை கிளப்பிவிடுவதற்கும், நமக்குள் அதாவது தமிழ் வலைப்பதிவாளர்களுக்குள் சண்டை போடவும் அநாகரீக பின்னூட்டம் இடுவதற்கல்ல.

கருத்துகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான, எதிர்கால விடிவுக்கான ஒரு சிறு கல்லாக பயன்பட்டாலே போதும் என்று எண்ணுகிறேன். எழுதும் போது தயவுசெய்து தன் மனசாட்சிக்கு முதலிடம் கொடுத்து எழுதுங்கள்.

ஒருவருடைய கருத்து மற்றவருக்கு ஒவ்வாது இருக்கலாம், ஏனெனில் எல்லாரும் ஒரே வித கருத்துகளை கொண்டிருப்பது கிடையாது ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும்.

காரணம் அவரவர் வாழ்வியல் அனுபவம் வாயிலாக பெற்ற பெறுபேறுகளை கொண்டு எழுதலாம், அப்படி தான் அநேகர் முயற்சிக்ககூடும். அநேகர் தான் வாசித்தறிந்த அல்லது கேட்டு பார்த்த இலங்கை சம்பந்நதமான விடயங்களை வைத்து அதற்கான தீர்வை சொல்லகூடும், எழுதட்டும்.!

இதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் கருத்துகள் மிகவும் உணாச்சிபொங்ககூடியதாக இருக்க வாய்பிருக்கிறது. அதிலும் இலங்கையில் நடக்ககூடிய போரை நியாயப்படத்தகூடிய வகையில் எழுதவும் வாய்ப்பிருக்கிறது, காரணம் அது அவர்களது அனுபவம் சார்ந்தது. எழுதட்டும்!

சிலர் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வாய்பிருக்கிறது காரணம் அது அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு அனுபவிக்கிற வாழ்வியல் அரசியல் காரணிகள் தீர்மான்க்கிற விடயமாக இருக்கலாம், எழுதட்டும்!

மேலும் சிலர் ஈழப்போராட்டதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் என்ற நிலையிலிருந்து எழுதலாம,; எழுதட்டும்!.

இப்படி பலரும் எழுதும் போது கருத்துகள் சங்கமிக்கிறபோது ஒரு புது தீர்வு பிறக்க நிச்சயம் வாய்பிருக்கிறது. அரசியலிலும், பெரும் பதிவிகளிலும், தீர்மானம் செய்யக்கூடிய நிலைகளில் உள்ளவர்களுக்கு மக்கள் மனதறிந்து செயற்பட இம்மாதிரியான கருத்துகள் ஒரு சிறு துளியாக மாற வாய்பிருக்கிறது.

உங்கள் உங்கள் பதிவுகளிலேயே எழுதுங்கள், அனைத்தையும் திரட்டி தரத்தான் வலைத்திரட்டிகள் இருக்கின்றனவே. நிச்சயம் ஒரு நிலையில் இது அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான பேச்சு மேசையில் வைக்கப்படும்…. அப்போது மக்கள் விருப்பங்களும், கனவுகளும், ஏக்கங்களும் அவர்களின் எதிர்பார்ப்புளும் கூட தீர்வு மேசையில் ஒரு நல்ல தீர்க்கமான தீர்வை எட்ட சிறந்த காரணிகளாக அமையும்.

எங்காவது ஒரு மின்னல் கீற்று பிறக்கும் நிச்சயம் இலங்கைதமிழர் வாழ்கைக்கு விளக்கேற்றும்.

தீர்வை எட்ட என்ன செய்யலாம்…. யாரினுடைய பங்களிப்புகள் மத்தியஸ்தம் தேவை. போராட்ட குழுகளின் அணுகுமுறைகள், இலங்கை அரசின் அணுகுமுறைகள் மற்றும் இந்த இருவரை விடுத்து தமிழ் கட்சிகளின் அணுகுமுறைகள் எப்படி இருக்கலாம்… யாருடைய அல்லது எந்த நாட்டை அல்லது நாட்டின் செயற்பாடுகளை அரசியல் கொள்கைகளை ஒரு முன்மாதிரியாக கொள்ளலாம், என்பதாக எழுதுங்கள்.

மக்களுக்கான விடுதலை என்று தொடங்கி, போராட்டம், பின்னர் சண்டை பின் சமாதானம் தீர்வு என்று எத்தனையோ நாடுகள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டிருக்கின்றன.

புலம் பெயர்ந்த தமிழன் வாழாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு இன்று எங்கும் தமிழன் பரந்து வாழும் நிலையில் நல்லவைகள் எங்கிருந்தாலும் அதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

மீண்டும் தயவாக சொல்லிக்கொள்ள விரும்புவது நமது இந்த நோக்கம் இலங்கை தமிழனின் எதிர்கால விடிவுக்கு ராமர் பாலம் கட்ட உதவிய அணிலின் சிறு துளியாக இருந்தாலே போதும் என்றுதான்.

நடந்தவைகள் அனைத்தும் நடந்தவைகளாகவே இருக்கட்டும் கடந்த நிகழ்வுகளை நமக்கான எதிர்காலத்திற்கான அனுபவமாக எடுத்துக்கொள்வோம்.

கடைசியாக உதாரணத்திற்காக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் ஒரு திருமணம் ஒரு மரணம் ஒரு பூப்பெய்த விழா என நடத்தவேண்டிய கட்டாய நிலை தோன்றினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்று நீங்கள் கருதுவீர்கள்.


தமிழ் பற்றியும் தமிழன் பற்றியும் ரொம்பவும் ஆர்வமாக பேசுகிறோம் எழுதுகிறோம், ஏன் தெரியுமா நமக்கெல்லாம் வாழ ஒரு ஆதாரம் இருக்கிறது வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் வீட்டில் மனைவி மக்களுடன் சுகமோ துக்கமோ பகிர்ந்து கொண்டு தின்று தூங்கி எழுந்து மறுநாள் மீண்டும் வேலைக்கு போவதும் வருவதுமாக இருக்க பழகிக்கொண்டோம்.

ஆனால்

இலங்கையில்ஓரு பக்கம் வடக்கில் ஒரு சமூகம் காட்டில் வாழ வழியின்றி ஆனால் ஏக்கத்தை மட்டுமே நெஞ்சில் விதைத்தப்படி அடுத்தவேளை என்பதை இருட்டில் தொலைத்து விட்டு நிற்கிறது.

இன்னொரு பக்கம் மத்தியில் ஒரு சமூகமோ இலங்கை பொருளாதாரத்தின் முதுபெலும்பாக இருந்து தன் உழைப்பால் நாட்டை உயர்த்திவிட்டு, சிறுமைப்பட்டு அடிமைபட்டு வாழ்விழந்து கிடக்கிறது.

மற்றொரு பக்கம் கிழக்கில் இன்னுமோர் சமூகத்தை பற்றிய செய்தியே வெளியில் வராத நிலையில் சொல்லமுடியாத சோகத்தோடு திண்டாடிக்கொண்டிருக்கிறது.

தமிழன் என்றாலே தீண்டதகாதவன் அல்லது புலிதான் என்ற பார்வையில் அல்லது சந்தேகத்தின்; மத்தியில் அனைத்து சமூக மக்களுமே தலைநகரில் அவதியுரும் நிலைமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வலைஞர்களே வாருங்கள்…. தமிழன் நிலைபற்றி எழுதுங்கள், உங்கள் கண்ணோட்டங்களை கருத்துகளை, சாத்தியங்களை எழுதுங்கள்.

பாரதியின் பொய்யாகி போன வரிகளை மெய்யாக்க விதை விதைப்போம்…. ரொம்பவும் காலம் தாழ்திய விதைப்புதான் ஆனால் நல்ல விளைச்சளை எதிர்பார்த்து.

அக்டோபர் 19, 2008

அந்த குறுந்தகடு

இலங்கையில் என்ன நடக்கிறது என்று இப்பொழுதாவது மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவிய அந்த குறுந்தகடு அதை உருவாக்கியவர்க்கும் அல்லது உருவாக்கிய உணர்வாளர்கள் அனைவருக்கும் கோடி வணக்கங்கள்!
அதை வாசிக்கவைத்த குமுதம் ரிப்போர்டருக்கும் ஆயிரமாம் நன்றிகள்.

இன்று இந்த நிலைக்கு அதாவது சீடி பார்த்து இலங்கையில் உள்ள வடக்கில் வாழும் தழிழர் நிலையை உணரும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

இலங்கை அரசின் போர் தீவிரவாத்திற்கு எதிரானதும் தீவிரவாதிகளோடும் தான் என்றால் தனது நாட்டின் மக்களை பாதிக்காத வகையில் தான் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பொறுப்புடன் இருக்க வேண்டும் மற்றும் யுத்தம் குறித்த சர்வதேச விதிமுறைகளுக்கு கட்டுப்படடு யுத்தத்தை கொண்டு நடத்த வேண்டும்.

சர்வதேச அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள், சர்வதேச சமூகம், மற்றும் ஐநா போன்றவை என எல்லாம் இருந்தும் யாருமே கேட்பாரற்ற நிலையில் இலங்கையில் ஒரு இனம் வாழ வழியின்றி திக்கற்று நிற்கிறது. இன துவேஷம்; புலிகளை அடக்குகிறோம் என்ற போர்வையில் பெரும்பான்மையிடத்தில் கொழுந்து விட்டு எறிகிறது.

இலங்கை அரசு தான் நினைத்தபடி காரியங்களை செய்ய வைத்தது எது?.
இவற்றுக்கெல்லாம் பிராந்தியம், அரசியல், அப்படி இப்படி என்று பெரும் வியாகியானங்களோடு எது சொன்னாலும் என்ன ஆராய்ச்சி செய்தாலும், முதல் காரணியாக இருப்பது தமிழனின் ஒற்றமைதான்.

ஒரு காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்திலே எதிர் கட்சி என்ற பலத்தோடு இருந்தது என்பதை எல்லாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படி இருந்த இனம் இன்று சிடி மூலம் உலகுக்கு தன் நிலை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு வந்திருப்பது ஏன்? நமக்குள் ஒற்றுமை இல்லாது போனது தான்.

ஒரு வாதத்திற்காக இப்படி எடுத்துகொண்டு யோசித்து பாருங்கள் ஒரு வேளை இலங்கை அரசே சுய நிர்ணய உரிமை அல்லது தனி நாடு என்று நமக்கு கொடுத்திருந்தாலும் கூட நாமே நமக்குள் நீயா நானா, நீ வந்தாயா அல்லது நீ கேட்டாயா? நீ பெரியவனா நான் பெரியவனா அல்லது என் ஜாதி உன் ஜாதி என்று நமக்குள்ளே அடிபட்டு கிடந்திருப்போம். சற்று ஆழமாக யோசித்தால் இது தான் உண்மை. இந்த வேளையில் இதை சொல்வது வேதனைதான் ஆனாலும் இந்த சூழலுக்கும் இப்போதைய வேதனைக்கும் தள்ளப்பட இந்த ஒற்றுமையின்மை தானே காரணம்.

நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் இது நடக்குமா?
போதாதற்கு புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் நாம் செய்யும் அட்டகாசம் கொஞ்சமா?.... வெளிவரும் செய்திகளை பார்க்கும் போது நமக்கே வெட்கமாக இருக்கிறது. கோயில்கள் பெயரால், ஜாதிகள் பெயரால் என இப்படி நாம் பலவழிகளில் முட்டி மோதிக்கொள்கிறோமே!........ யார் சிந்திப்பது
வேண்டாம் நமக்குள் வேறுபாடுகள்!

எட்டுதிக்கெங்கிருந்தும் ஆதரவு குரல் வரட்டும் தமிழன் தலை மீண்டும் நிமிரட்டும் இலங்கை மண்ணில்.

ஆகஸ்ட் 30, 2008

நமது பூமி!

நாம் வாழும் பூமியை பால்வீதியில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்ற கேள்விக்கு விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம் எடுத்த படங்கள் கீழே.
இரவில் நமது பூமி எப்படி தெரிகிறது என்று பாருங்கள்.

ஆகஸ்ட் 29, 2008

கலைஞனுக்கு அஞ்சலி,


நண்பர்களே!

இலங்கையின் இசைத்துறையில் எல்லாருக்கும் பரிச்சயப்பட்ட ஒரு கலைஞன் திரு. நேசம் தியாகராஜா எம்மை விட்டு இம்மண்ணைவிட்டு பிரிந்து விட்டார்.


செய்தி- தென்றல் தொலைகாட்சி.


இவர் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கை இசைக்கலைஞர்களுக்கும் அறிமுகமும் பரிச்சயமானவர். கர்நாடக சங்கீத கலைஞனாக இருந்தபோதும், மேலைதேய தாள வாத்தியமான ட்ரம்ஸ் வாத்தியத்தில் வித்தகர், புகழுக்கு சொந்தகாரர் என்றால் மிகையில்லை.


ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணண் நேசம் என்ற இரட்டை இசையமைப்பாளராக இருந்து இலங்கையின் மெல்லிசைக்கு பெரும் பங்களிப்பை செய்தவர், நம் தேசத்திற்கேயுரிய பொப் இசைபாடல்கள் அநேகத்திற்கு இசையமைப்பாளர்.


கண்ணன் நேசம் அதே பெயரில் இசைக்குழுவாகவும் அந்த காலப்பகுதியில் பெரும் பிரபல்யம் பெற்றவர். இலங்கையின் மிகம்பிரபலம் பெற்ற சுப்பர் ஸ்டார் என்ற குழுவின் பிரதான ட்ரம்ஸ் வாத்திய கலைஞராக இருந்தவர். மேலும் பல இசைக்குழுக்களில் பங்காற்றியவர்.


இலங்கையில் சிங்கள மொழி இசைக்கு தனது பெரும் பங்களிப்பை செய்தவர் என்றால் தவறில்லை. எனக்கெல்லாம் முன்மாதிரியாயக இருந்தவர்,


கடந்த வாரம் இலங்கையில் உள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாகாநாட்டு மண்டபத்தில் ஒரு இசைநிகழ்சிசியில், மேடையில் இருந்துபோது தான் அவருக்கு இந்த மரணம் நேர்ந்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்தற்கரிய, பெருமைமிக்க மரணம், ஆனால் அவரது குடும்பத்திற்கு அவரை சார்ந்தவர்களுக்கு, ஈடு செய்ய முடியாத இழப்பு.


அவரோடு சேர்ந்து 90 களில் ஒரே மேடையில் இசைநிகழ்சிகள் செய்யதவன் என்ற அளவில் புலம் பெயர்ந்து உலகம் முழுதும் வாழும் எண்ணற்ற இலங்கை இசைக்கலைஞர்கள் சார்பாக அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும், அவரைபிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
 
 
 

ஆகஸ்ட் 28, 2008

வடை திருடிய காகம்


நாமெல்லாம் சின்ன வயதில் பாட்டி வடை சுட காகம் தூக்கிகொண்ட போன கதை கேட்டிருக்கிறோம்.
எனக்கு மின் அஞ்சலில் வந்த நவீன வடை திருடல்
பற்றிய கதையை பாருங்கள்….


படம் 1
படம் 2


படம் 3


படம் 4



படம் 5

ஆகஸ்ட் 24, 2008

திரும்ப வந்து வந்துடோம்ல!

வந்தது வந்தாகிவிட்டது,ஏதாவது பதிக்கனும்,எதைபத்தி எமுதலாம்ன்னு யோசிக்கையில்
ஏன் வரலைன்னு சொன்னா நல்ல இருக்குமுன்னு தோணிச்சு….
அது தான் கீழே:
முதல் காரணி 2006ன் கடைசிப்பகுதியில் எனது தொழில் மாற்றம் மற்றும் அது சார்ந்த தாக்கங்கள்.
மற்றது முக்கியமான ஒன்று,அது 2007ன் இறுதியில் எங்கள் குடும்பத்தின் புது வரவு என் மகள்.
இதன் பிறகு இந்த இரண்டு வருடமாக நான் என் கவனத்தை வேறு எதிலுமே செலுத்தவில்லை என்று கூட சொல்லலாம். என்னை பொறுத்தவரை ஆன்மீக உலகில் சொல்லப்படுகிற சொர்க்கம்,என்பது இறைவனால் மனிதனுக்கு உலகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு குழந்தையின் வரவிற்கு பின் மனிதனின் வாழ்கையில் தானாக ஏற்படுகின்ற மாறுதல்கள் தவிர்க்கபட இயலாத ஒன்றாகிறது, அதுவும் தாய் மண்ணை பிரிந்து தன் குடும்ப சுற்றாடலை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் போது வரக்கூடிய அனுபவம் அது ஒரு புதிய அனுபவம்.
புலம் பெயர்ந்து தங்கள் குடும்பத்துடன் வசிக்கும் எல்லாருக்கும் இதில் மாற்று கருத்து இருக்கும் என எனக்கு தோன்றவில்லை.அது தான் முன்னைய பதிவிலேயே சொல்லியிருந்தேன் தமிழர் அல்லாத தமிழர் வாழ்வியல் முறைகைளை கைக்கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது என்று.
அதுதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே…. சுதந்திரமாக எதைபற்றியும் கவலைப்டாது இருக்கும் இளைஞனை பார்த்து'அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று' எவ்வளவு அர்த்தம் பொருந்திய அனுபவம் பொதிந்த வார்தை,
நான் கூட ஒரு காலகட்டத்தில் இதெல்லாம் சுத்த பைத்தியகாரதனம் என்று நினைத்தது உண்டு.ஆனால் பாருங்கள் நம் முன்னோர்கள் யாரும் இன்று நாம் இருப்பது போல் இருந்திருக்கவில்லை, ஆனால் வாழ்வியல் அனுபவ முறைகளில் எவ்வளவு தன்னிறைவு அடைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
வள்ளுவன் சொன்னதை பாருங்கள்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்".
இதைவிட என்ன வேண்டும் தமிழனின் பெருமையை சொல்ல
நண்பர்களே!
எனது இந்த இரண்டு வருட காலத்தில் வேலை தவிர்த்து எனக்கு கிடைத்த நேரத்தை நான் பகிர்ந்து கொண்ட,என் வாழ்வில் உள்ள அனைத்து சோகம் மறந்து, கவலைகளை துறந்து,செலவிட்ட அந்த கணங்களுக்கு சொந்தகாரியை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பார்த்துவிட்டு சொல்லுங்கள்,
வாழ்க வளமுடன்!
மூன்றாம் மாதம்
நான்காம் மாதம்
ஆறாம் மாதம்
ஒன்பதாம் மாதம்
பத்தாம் மாதம்
பதினோராம் மாதம்
முதலாம் பிறந்தநாள்
தற்போது ( 16-08-2008 ல் எடுத்தது)

ஆகஸ்ட் 23, 2008

திரும்ப வருகிறேன்………..!

ஏறக்குறைய 3 ஆண்டுகள் கழிந்து விட்டது எனக்கு திரும்பி வர….,

கால ஓட்டத்தில் மனித வாழ்கை எப்படியெல்லாம் மாறுபாடு அடைகிறது என்பதை சரியாக உணரும் காலகட்டமாக கடந்த ஆண்டுகள் எனக்கு இருந்திருக்கிறது. கொஞ்சம் திரும்பிபார்த்தால் மனித வாழ்கையை எவ்வளவு விடயங்கள் தீர்மானிக்கின்றன, என்பதில் வியந்து நிற்கிறேன்.நான் சொல்வது தமிழர் அல்லாத தமிழரின் இந்த வாழ்வியல் முறைகளை கைகொள்ளாதவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்பவில்லை.

இனி அடிக்கடி வந்து, நான் பார்த்த படித்த கேட்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வேன்.

நன்றி

ஜூலை 06, 2008

[காலக்கிறுக்கன்] New comment on வாழ்த்துகள் இரண்டு! .

Tamil Paiyan has left a new comment on your post "வாழ்த்துகள் இரண்டு! ":

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்



Posted by Tamil Paiyan to காலக்கிறுக்கன் at 2:19 PM