அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 31, 2022

என் மனதில் பட்டது

 இன்று ஒரு பத்திரிகையில் வந்த  செய்தி

74 வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு செய்தி ஆனால் இதை சற்று ஆழமாக யோசித்தோமா?

கணித பாடம் தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதா?  கணிதம் எனக்கு சரியாக வராது என்றால் நமக்கு வாழ்கை அவ்வளவு தானா? இலங்கை கல்வி முறைமையை பொருத்தவரை இது தான் நியதி. இது எவ்வளவு தவறான  முறைமை அல்லது கொள்கை என்பதை ஏன் இன்றுவரை யாருமே உணர மறுக்கிறோம். இதனால் எத்தனை பேர் வாழ்கையில் தான் நினைத்தை செய்ய முடியாது போயிருக்கிறது.

இது திட்டமிட்டசதியா? அல்லது அலட்சிய போக்கா? தெரியவில்லை. அந்த பரீட்சாத்தி ஒரிடத்தில் “ நான்கு திறமை சித்திகள் பெற்றிருந்தேன். பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.” என்று கூறுகிறார். எவ்வளவு வேதனையான விடயம்.

கணக்கியல் அல்லாத எந்த ஒரு துறைக்கும் கணக்கு அவசியமே இல்லை. அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவணுக்கு அடிப்படை கணித அறிவு நிச்சயம் இருக்கும்.
மேலும் கணக்கியல் இன்றி முடியாது என்று துறைககள் உள்ளது, பொறியியல், கணணி, துறை போன்றவை. ஆனால் வைத்திய துறைக்கு கூட பெரிய கணித அறிவு தேவைபடாது என்றே சொல்வேன்.
  அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும் துறைசார் தகைமைகளை படித்து தேர்ச்சி பெறும் போது வைத்திய துறைக்கான அதற்குறிய கணித அறிவு அந்த நபருக்கு தேவையான அளவு வளர்ந்து விடும் அல்லது வளர்த்துக் கொள்ளலாம்.

மேலும் கணித பாடத்தில் சித்தியில்லை என்றால் ஒரு நபரால் ஒரு காசாளராக (கேசியர்) வேலை பார்க்க முடியாதா? வரவையும் செலவையும் எழுதி மிகுதி பணத்துக்கு பொறுப்பு கூற முடியாத அவ்வளவா முட்டாளாக இருப்பார்கள்?

ஆனால் இலங்கையில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும். “ சில நேரம் ஒரே தடவையில் கணித பாடத்துடன் ஆறு பாடங்கள் அல்லது ஐந்து பாடங்கள் சித்தியடைந்திருத்தல்”  என்று வரும் கணிதம் அத்தனை அவசியமே இல்லாத ஒரு துறைக்கு.

ஆக இந்த கணக்கை வைத்து எவ்வளவு பெரிய தப்புகணக்கு போடுகிறார்கள்.

உலகில் மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் இப்படிதானா செய்கிறார்கள். அங்கெல்லாம் கல்வி முறை வேறு அது “மக்களை வாழவைக்கும் கல்வி முறை” இங்கு தான் இப்படி.

கைத்தொழிலில் கொடிகட்டி பறக்கும் சீனாவில் நாம் வாங்கி பாவிக்கும் சின்ன சின்ன இலக்ட்ரோனிக் சாதனங்கள்,மற்றும் விளையாட்டு பொருட்களை குடிசைக் கைதொழிலாக செய்கிறார்கள், அதில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் கணித மேதாவிகளா? … கணித பாடமே இல்லாமல் வாழ்கையில் ஜெயித்தவர் பட்டியல் கொஞ்சமல்ல.

வாழ்கைக்கு கல்வி மிக அவசியம் இதில் கணிதம் தெரிந்தால் தான் கல்வி, இல்லையென்றால் வாழ முடியாது ஜெயிக்கவும் இயலாது என்றால் அப்போது மற்றவைகள் எல்லாம் என்ன புண்ணாக்கா?.... 
கொஞ்சம் யோசிங்க! 

நன்றி! 

மார்ச் 20, 2012

இலங்கையும், - இனக்கலவரமும்

என்னத்த சொல்ல....!,
இலங்கையை பொறுத்தவரையிலும், அதன் பிரச்சினையை பொறுத்தவரையிலும், சர்வதேச சமூகம், அப்படி இப்படி என்பதெல்லாம் வெறும் புண்ணாக்கு அவ்வளவு தான். மொத்த பூமிபந்தில் உள்ள ஆதிக்க நாடுகளும் சரி, ஆதிக்கத்தை வலுபடுத்த உருவாகும் நாடுகளும் சரி… நம்மை (இலங்கையை) பார்ப்பது இந்த இளிச்ச வாயன்களை எப்படி பயன்படத்திகொள்ளலாம் என்பதை பற்றி மட்டுமே!...

கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்து. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.

சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை) 

அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.

இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!

சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.

கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!

(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாம், நம் இலங்கை தன் இனங்கள் சார்பில் அது கற்று வந்த பாடங்கள் 1968 லிருந்து இன்றுவரை யாரும் தெரியாதது அறியாதது அல்ல.

நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்

திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)

சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

நானொரு முட்டாளுங்க - ரொம்ப நல்லா தெரிஞ்சவுங்க நாலு பேரு சொன்னாங்க”!....

ஏப்ரல் 05, 2011

2 கோடி மக்கள் மற்றவர்களை மகிழ்விக்க

இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..

இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. 

என் தனிபட்ட கருத்து என்னவெனில்

போய் பாருங்க கூத்த……



கோணங்கி 1: போய் பாருங்க கூத்த……
கோணங்கி 2: அட ஆமா!... எங்கயோ இடிக்குற மாதரி இருக்குதுல்ல……
கோணங்கி 1: கடைசியில என்னாகும் தெரியுமா?.....
கோணங்கி 2: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு தான்….
கோணங்கி 1: ஐயோ ஹய்யோ…….

செப்டம்பர் 16, 2010

தீடீர் பதிவு


இப்போதைக்கு இது தான் செய்தி,
பாருங்கள் படத்தை…….
அண்மையில் ஆரம்பமான மத்தியகிழக்கின் சமாதான பேச்சுவார்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது அனைவரும் அறிந்ததே!... ஆனால் அதுவல்ல பிரச்சினை… யார் தலைமை தாங்கி எல்லோரையும் அழைத்து சென்றது என்பது தான் இப்போதைய சர்ச்சை!.
 

நவம்பர் 11, 2008

ஒன்னுமே புரியலே இலங்கையிலே

ஒன்னுமே புரியலே இலங்கையிலே
என்னமோ நடக்குது …..


என்னன்னு கீழே பாருங்க .....

பெரிதாக்கி பார்க்க படத்தை கிளிக்கவும்





இங்க சனம் திருந்துர மாதிரியும் தெரியல…
இந்த சணடை நிக்குமுன்னும் தோணலை.

நவம்பர் 05, 2008

மாற்றம் வருகிறது.

பூமி பந்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்று போற்றப்படுவதும், வாய்புகளின் இருப்பிடம் என்று கூறப்படுவதுமான அமெரிக்காவில் இன்று ஓரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது… எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் இது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக திரு. பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்,

அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை., அமெரிக்க வெள்ளை இனத்தவர் மத்தியில் ( பரவலாக இல்லாவிட்டாலும் அது தான் உண்மை) ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர சமூகமாக கருதப்படும் ஒரு சமூகத்திலிருந்து அந்நாட்டை 21ம்நூற்றாண்டின்; பாதையில் நடத்தி செல்ல ஒரு தலைவனை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரை நான் 90 களில் பார்த்திருக்கிறேன் ROOTS (வேர்கள்)என்று.
எப்படி ஆபிரிக்க கறுப்பினத்தவாகள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன என்ன, பின்னாளில் இவற்றிலிருந்து எப்படி இம்மக்கள் விடுதலை ஆனார்கள், எவ்வாறு அந்நாட்டின் குடிகளானார்கள் என்று இருக்கும்.

இவ்வாறு நிற வெறியினால் பீடிக்கப்படடு இருந்த அமெரிக்கர்கள் இன்று நிறம், மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து இன்று ஒன்று பட்டு நிற்பதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் ஒடுக்கப்பட்ட சமூகம் எங்கும் எந்த காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழாது என்பதாகும்.

இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி ஆரவாரம் என்பவற்றை பார்க்கும் போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. அதே நேரம் மனசுக்குள் சற்று பயமாகவும் இருக்கிறது. இவ்வாறாக காட்டப்படும் பெரும் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொள்ளும் கயவர்களும் பாதகர்களும் இருப்பார்கள், மாற்றம் கொண்டுவர மாறுதலாய் வந்த நிற்கும் இம் மனிதனுக்கு இவர்களால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று.

ஏனெனில் பழைய அமெரிக்க வரலாறுகளை எடுத்து பார்த்தால் நல்ல ஆட்சியாளர்களை அந்த நாடு நெடுநாட்கள் கொண்டிருந்ததில்லை.

ஏற்கனவே செய்திகளில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டார்கள் என்று கூறி இருவரை கை செய்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன் பி.பி.சி செய்திகளில் சொல்லப்பட்டது. அதற்கு பின் அந்த செய்தி அப்படியே இல்லாது போய்விட்டது.

எந்த தொந்தரவுகளும் ஆபத்துகளும் நேராது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்கவும், ஒடுக்கபட்ட சமூகம் என்ற பெயரில் இருந்த ஒரு இனம் புதிய யுகம் காணவும், அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவும் வாழ்த்தி நிற்போம்.!

அக்டோபர் 28, 2008

இதுவரை போட்ட கணக்கு

வழக்கமாக செய்திகள் தொகுத்து தரும் முறையை விட நான் ஒரு புது முறையை முயற்சித்திருக்கிறேன்
பாருங்கள்

படத்தை சொடுக்கவும்:




கேள்வி
தமிழகமெங்கும் இருந்து சேகரிக்கப்படும் பொருட்கள் உதவிகள் எல்லாம் உண்மையிலேயே அந்த மக்கள் துயர் துடைக்குமா?

அல்லது நாங்கள் பொருட்களை விநியோகிக்கும் போது விடுதலைப்புலிகள் அந்த பொருட்களை கடத்திக்கொண்டுபோய் விடுகிறார்கள், ஆகவே சீராக விநியோகிக்க முடியவில்லை என்று சொல்லி இலங்கை ராணுவம் இடைநிறுத்தி விடுமா?

அல்லது எல்லாவற்றிகும் மேலாக! பொருட்கள் வந்து சேரும் முன்னரே வடபகுதியில் முழு தமிழனும் அழிக்கபட்டு விட்டுவானா?

அக்டோபர் 23, 2008

ஈழம்


இன்றைய தேதியில் நம்மிடையே எல்லா செய்திகளையும் பின் தள்ளி எல்லாரிரடமும் முதலில் வந்து நிற்பது ஈழமும் ஈழத்தமிழரின் துயரமும் தான்.

உலக செய்திகளில் இந்த செய்திகள் பத்தோடு பதினொன்று தான்.

சர்வதேச அளவில் எல்லோராலும் பார்க்கப்படுகிற அல்லது அது தான் உண்மையானது என்ற ஒரு எண்ணபாட்டை ஏற்படுத்தவல்லதாக இருக்கிற அல்லது அப்படி இருப்பதாக காட்டப்படுகிற பிபிசி சீஎன்என் அல்ஜெசீரா போன்ற செய்திகளில் இலங்கைத்தமிழர் நிலை பத்தோடு பதினொன்றாக கூட இல்லை.

தமிழகத்திலும் மற்றும் தமிழர் எங்கெங்கு புலம் பெயர்ந்து வாழ்கிறார்களோ அவர்களிடத்திலும் தமிழ் வலைப்பதிவுகளிலும் தான் முழு வீச்சுடன் இருக்கிறது.

தமிழகத்திலும் கூட ஈழத்தமிழர் பற்றிய அந்த குறுந்தகட்டுக்கு பின்னர் தான் அதுவும் தமிழக முதல்வர் திரு கலைஞர் அவர்கள் அந்த குறுந்தகட்டை பார்த்து, அவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை குமுதம் ரிப்போட்டர் எழுதியதை பார்த்த பின்னர் தான் தமிழக மக்களுக்கு உறைத்திருக்கிறது. உறைத்திருக்கிறது என்று கூற முடியாவிட்டாலும் இலங்கை தமிழனுக்கான ஆதரவை வழங்குவதிலிருந்த அரசியல் சார்ந்த பயம் நீங்கியிருக்கிறது….

விளைவு

தமிழர் அனுதாபம் சுனாமி போல் எழுந்து விட்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் உடனே காத்திரமான ஒரு தலையீட்டை காட்ட தமிழக அரசு மத்திய அரசை நிர்பந்திக்கிற அளவிற்கு போயிருக்கிறது. இவ்ளவு நாள் இந்த அளவு முழு வீச்சை இதில் தமிழகம் காட்டவில்லையே. அதாவது தற்போது நடக்கிற யுத்தம் தொடங்கி ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகின்றன அப்போதெல்லாம் நாம் எங்கிருந்தோம், நமக்கு தெரியாதா?. சீடி வந்து தான் நமக்கு தெரியுமா?.

எது எவ்வாறாயினும் இப்போததைய இந்த அலை எந்தவொரு சுயலாபத்தையோ, அரசியல் லாபத்தையோ கருத்தில் கொள்ளாது உண்மையில் இருதய சுத்தியோடு இலங்கை தமிழரின் ஏறக்குறைய 30 ஆண்டுகால பரிதவிப்புக்கும், தொடர்ந்து கொண்டிருக்கும் கொலைகளுக்கும், மரணங்ளுக்கும், வாழ்வியல் விடிவிற்கு வழிவகுத்தால் உண்மையில் இத்தருணம் வரலாற்றில் குறிக்கப்படும் என்பது உண்மை.

இப்பதிவை எழுத வந்த நோக்கம் என்ன வென்றால் எல்லாரும் அவலங்களையும், பிரச்சினைகளையும் மட்டும் பேசுகிறோம், இதற்கான தீர்வு என்ன எனபது பற்றியும் அவர் அவர் கருத்துகளையும் கூறினால் நல்லதாக இருக்கும் என் எண்ணுகிறேன்.

அதற்காக தான் சொன்ன அல்லது சொல்கிற கருத்துகளை தான் மற்றவர்கள் ஏற்கனும், அது தான் சரி இது தான் சரி என்று நமக்குள் ஒரு சண்டை தேவையில்லை.

இது பிரச்சினையை கிளப்பிவிடுவதற்கும், நமக்குள் அதாவது தமிழ் வலைப்பதிவாளர்களுக்குள் சண்டை போடவும் அநாகரீக பின்னூட்டம் இடுவதற்கல்ல.

கருத்துகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான, எதிர்கால விடிவுக்கான ஒரு சிறு கல்லாக பயன்பட்டாலே போதும் என்று எண்ணுகிறேன். எழுதும் போது தயவுசெய்து தன் மனசாட்சிக்கு முதலிடம் கொடுத்து எழுதுங்கள்.

ஒருவருடைய கருத்து மற்றவருக்கு ஒவ்வாது இருக்கலாம், ஏனெனில் எல்லாரும் ஒரே வித கருத்துகளை கொண்டிருப்பது கிடையாது ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு கருத்துகள் இருக்கும்.

காரணம் அவரவர் வாழ்வியல் அனுபவம் வாயிலாக பெற்ற பெறுபேறுகளை கொண்டு எழுதலாம், அப்படி தான் அநேகர் முயற்சிக்ககூடும். அநேகர் தான் வாசித்தறிந்த அல்லது கேட்டு பார்த்த இலங்கை சம்பந்நதமான விடயங்களை வைத்து அதற்கான தீர்வை சொல்லகூடும், எழுதட்டும்.!

இதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் கருத்துகள் மிகவும் உணாச்சிபொங்ககூடியதாக இருக்க வாய்பிருக்கிறது. அதிலும் இலங்கையில் நடக்ககூடிய போரை நியாயப்படத்தகூடிய வகையில் எழுதவும் வாய்ப்பிருக்கிறது, காரணம் அது அவர்களது அனுபவம் சார்ந்தது. எழுதட்டும்!

சிலர் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த வாய்பிருக்கிறது காரணம் அது அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு அனுபவிக்கிற வாழ்வியல் அரசியல் காரணிகள் தீர்மான்க்கிற விடயமாக இருக்கலாம், எழுதட்டும்!

மேலும் சிலர் ஈழப்போராட்டதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் என்ற நிலையிலிருந்து எழுதலாம,; எழுதட்டும்!.

இப்படி பலரும் எழுதும் போது கருத்துகள் சங்கமிக்கிறபோது ஒரு புது தீர்வு பிறக்க நிச்சயம் வாய்பிருக்கிறது. அரசியலிலும், பெரும் பதிவிகளிலும், தீர்மானம் செய்யக்கூடிய நிலைகளில் உள்ளவர்களுக்கு மக்கள் மனதறிந்து செயற்பட இம்மாதிரியான கருத்துகள் ஒரு சிறு துளியாக மாற வாய்பிருக்கிறது.

உங்கள் உங்கள் பதிவுகளிலேயே எழுதுங்கள், அனைத்தையும் திரட்டி தரத்தான் வலைத்திரட்டிகள் இருக்கின்றனவே. நிச்சயம் ஒரு நிலையில் இது அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான பேச்சு மேசையில் வைக்கப்படும்…. அப்போது மக்கள் விருப்பங்களும், கனவுகளும், ஏக்கங்களும் அவர்களின் எதிர்பார்ப்புளும் கூட தீர்வு மேசையில் ஒரு நல்ல தீர்க்கமான தீர்வை எட்ட சிறந்த காரணிகளாக அமையும்.

எங்காவது ஒரு மின்னல் கீற்று பிறக்கும் நிச்சயம் இலங்கைதமிழர் வாழ்கைக்கு விளக்கேற்றும்.

தீர்வை எட்ட என்ன செய்யலாம்…. யாரினுடைய பங்களிப்புகள் மத்தியஸ்தம் தேவை. போராட்ட குழுகளின் அணுகுமுறைகள், இலங்கை அரசின் அணுகுமுறைகள் மற்றும் இந்த இருவரை விடுத்து தமிழ் கட்சிகளின் அணுகுமுறைகள் எப்படி இருக்கலாம்… யாருடைய அல்லது எந்த நாட்டை அல்லது நாட்டின் செயற்பாடுகளை அரசியல் கொள்கைகளை ஒரு முன்மாதிரியாக கொள்ளலாம், என்பதாக எழுதுங்கள்.

மக்களுக்கான விடுதலை என்று தொடங்கி, போராட்டம், பின்னர் சண்டை பின் சமாதானம் தீர்வு என்று எத்தனையோ நாடுகள் இந்த இடர்பாடுகளிலிருந்து மீண்டிருக்கின்றன.

புலம் பெயர்ந்த தமிழன் வாழாத நாடுகளே இல்லை என்ற அளவிற்கு இன்று எங்கும் தமிழன் பரந்து வாழும் நிலையில் நல்லவைகள் எங்கிருந்தாலும் அதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதில் தப்பில்லை என நினைக்கிறேன்.

மீண்டும் தயவாக சொல்லிக்கொள்ள விரும்புவது நமது இந்த நோக்கம் இலங்கை தமிழனின் எதிர்கால விடிவுக்கு ராமர் பாலம் கட்ட உதவிய அணிலின் சிறு துளியாக இருந்தாலே போதும் என்றுதான்.

நடந்தவைகள் அனைத்தும் நடந்தவைகளாகவே இருக்கட்டும் கடந்த நிகழ்வுகளை நமக்கான எதிர்காலத்திற்கான அனுபவமாக எடுத்துக்கொள்வோம்.

கடைசியாக உதாரணத்திற்காக ஒன்றை சொல்லி முடிக்கிறேன். ஒரு வீட்டில் ஒரே நேரத்தில் ஒரு திருமணம் ஒரு மரணம் ஒரு பூப்பெய்த விழா என நடத்தவேண்டிய கட்டாய நிலை தோன்றினால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொண்டால் நல்லது என்று நீங்கள் கருதுவீர்கள்.


தமிழ் பற்றியும் தமிழன் பற்றியும் ரொம்பவும் ஆர்வமாக பேசுகிறோம் எழுதுகிறோம், ஏன் தெரியுமா நமக்கெல்லாம் வாழ ஒரு ஆதாரம் இருக்கிறது வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் வீட்டில் மனைவி மக்களுடன் சுகமோ துக்கமோ பகிர்ந்து கொண்டு தின்று தூங்கி எழுந்து மறுநாள் மீண்டும் வேலைக்கு போவதும் வருவதுமாக இருக்க பழகிக்கொண்டோம்.

ஆனால்

இலங்கையில்ஓரு பக்கம் வடக்கில் ஒரு சமூகம் காட்டில் வாழ வழியின்றி ஆனால் ஏக்கத்தை மட்டுமே நெஞ்சில் விதைத்தப்படி அடுத்தவேளை என்பதை இருட்டில் தொலைத்து விட்டு நிற்கிறது.

இன்னொரு பக்கம் மத்தியில் ஒரு சமூகமோ இலங்கை பொருளாதாரத்தின் முதுபெலும்பாக இருந்து தன் உழைப்பால் நாட்டை உயர்த்திவிட்டு, சிறுமைப்பட்டு அடிமைபட்டு வாழ்விழந்து கிடக்கிறது.

மற்றொரு பக்கம் கிழக்கில் இன்னுமோர் சமூகத்தை பற்றிய செய்தியே வெளியில் வராத நிலையில் சொல்லமுடியாத சோகத்தோடு திண்டாடிக்கொண்டிருக்கிறது.

தமிழன் என்றாலே தீண்டதகாதவன் அல்லது புலிதான் என்ற பார்வையில் அல்லது சந்தேகத்தின்; மத்தியில் அனைத்து சமூக மக்களுமே தலைநகரில் அவதியுரும் நிலைமை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

வலைஞர்களே வாருங்கள்…. தமிழன் நிலைபற்றி எழுதுங்கள், உங்கள் கண்ணோட்டங்களை கருத்துகளை, சாத்தியங்களை எழுதுங்கள்.

பாரதியின் பொய்யாகி போன வரிகளை மெய்யாக்க விதை விதைப்போம்…. ரொம்பவும் காலம் தாழ்திய விதைப்புதான் ஆனால் நல்ல விளைச்சளை எதிர்பார்த்து.