நவம்பர் 11, 2008

ஒன்னுமே புரியலே இலங்கையிலே

ஒன்னுமே புரியலே இலங்கையிலே
என்னமோ நடக்குது …..


என்னன்னு கீழே பாருங்க .....

பெரிதாக்கி பார்க்க படத்தை கிளிக்கவும்





இங்க சனம் திருந்துர மாதிரியும் தெரியல…
இந்த சணடை நிக்குமுன்னும் தோணலை.

நவம்பர் 10, 2008

அந்த அழியாத கோலங்கள்

நேற்று வீட்டில் பழைய புத்தகங்கள் பைல்களை புரட்டிக்கொண்டிருந்தேன், ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்றைத்தேடி…. அப்பொது கிடைத்து தான் கீழேயிருக்கும் கிறுக்கல்.

என் நண்பண் ஒருவனுக்காக அவன் கடலை போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கொடுக்க எழுதியது….

முற்றுமுழுதாக தமிழ் திரைப்படங்களின் பெயர்களை மட்டும் கொண்டு ஒரு கவிதை என்று சொல்லி கிறுக்கியது. இப்போது அவன் அந்த பெண்ணையே திருமணம் செய்து செட்டிலாகி விட்டான் குழந்தை குட்டிகளோடு.

மகிழ்ச்சி சந்தோஷம் விளையாட்டுதனம் மட்டுமே நிறைந்த அந்த இளமைபருவ காலம் கோடி கொடுத்தாலும் ஈடு இணையாகாது.

இதோ கிறுகக்ல், பார்த்துவிட்டு நீங்களும் ஏதாவது கிறுக்கிட்டு போங்க


அன்பே!

சிவகாமியின் செல்வன் - உன்
புன்னகை மன்னன்
நான் பாடும் பாடல் - என்றும்
“புதுக்கவிதை” –

என் காதலை
சொல்லத்தான் நினைக்கிறேன் - தினம்
ஒன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
இப்போது….
வைகாசி பொறந்தாச்சு –

ஆகவே...
தென்றலே என்னை தொடு
கண்ணே கனியமுதே! – நீ
நிறம் மாறாத பூக்கள்
ஆலயமணி
குங்குமச்சிமிழ்
கீதாஞ்சலி
சிட்டுக்குருவி
சிந்து பைரவி
சிவப்பு ரோஜா
புதுப்பாட்டு - அப்பப்பா !. . . . .

நினைத்தாலே இனிக்கும்.

கேளடி கண்மணி - அந்த
16 வயதினிலே
அம்மன் கோவில் கிழக்காலே
டார்லிங்! டார்லிங்! – படத்திலே
உன்னை நான் சந்தித்தேன்

அன்றுதான் எனக்கு
முதல் வசந்தம்

உன்,
பருவ மழை -கண்டு
புதுப்புது அர்த்தங்கள் -கொண்டு
நான் பாடிய
இதய கீதம்
புதிய ராகம்
வருஷம் 16 – போனாலும்
கடலோரக்கவிதையாய்
காற்றினிலே வரும் கீத(ம்)மாய் - வந்து
மண் வாசணை வீசும்

அடியே!
அன்னக்கிளி
ரோசாப்பு ரவிக்கைக்காரி
மீரா!...

உயிரே உனக்காக - என்றாய்

மாதங்கள் ஏ(ழு)ழில் - நம் காதல்
இருகோடுகள் - ஆனதென்ன

என் வாழ்வு உன்னோடு தான்- என்றாயே!
திசைமாறிய பறவை யாய் போனாயே
ஏன் ஏன்?

அரண்மணைக்கிளியே
பார் மகளே பார்
வசந்த மாளிகையை

இப்போது உன்
பூ விலங்கு
நாயகன்
சுவரில்லாத சித்திரங்கள்
பாலைவன ரோஜா
மூன்றாம் பிறை

வாழ்கை – இப்போது எனக்கு
புரியாத புதிர் –
பகலில் ஓர் இரவு

ஆகா!
அந்த 47 நாட்கள் - என்றும்
அழியாத கோலங்கள்

நவம்பர் 08, 2008

சிரிக்கலாம் வாங்க! (எ)

- உங்கள் கணவர் குறட்டை விடுபவரா? மனைவிகள் ஜாக்கிரதை!












வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

நவம்பர் 06, 2008

மலையகம்

இன்றைய நாட்களிலும்,பொதுவாக 80களின் பின்னரும் உலக அரங்கில் இலங்கை என்றால் முதன்மை நிலை பெறுவது தமிழர் பிச்சினை தான். அதிலும் விடுதலைப்புலிகள்,தமிழர் போராட்டம் பற்றிதான் தான்.

ஆனால் இப்போது தான் இலங்கையில் இன்னொரு சமூகம் தமிழை தாய்மொழியாக கொண்டாலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து விட்டு தான் மட்டும் கூனி குறுகி நிற்கிற அல்லது கைவிடப்பட்ட அல்லது காட்டிக்கொடுக்கபட்ட அவல நிலை பற்றி உலகிற்கு தெரிய வர ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக இறக்குவானை நிர்ஷன் புதிய மலையகம் என்ற தலைப்பில் தரும் மலையகம் அதன் மக்கள், அவர்கள் வாழ்கை, பற்றிய விடயங்கள் நிச்சயம் மலையகம் சாராத தமிழர்கள் உலகத்தின் எந்த பகுதியிலிருந்தாலும் தெரியவே வாய்பில்லை.

பதிவுகளை பார்க்க புதிய மலையகம் செல்லவும்.

இது பெரும் மகிழ்சிக்கும் போற்றுதலுக்கும் உரிய விடயம். சமூகம் விட்டு விடுதலையடைய விதைக்கபடுகிற விதை. அல்லது சமூக மேம்பாட்டிற்கான மற்றுமோர் கல். இதற்கு தமிழ் வலைபூக்கள் பெரும் பங்களிப்பை செய்வது மறுக்கமுடியாதது.

இதில் அநேகர் தம் பங்களிப்புகளை உலகத்தின் பார்வைக்கு வைப்பதால், இருளில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தின் அவலம் வெளிச்சத்திற்கு வருகிறது. இனி வரும் காலங்களில் இம்மக்களின் வாழ்வுயர அவர்களின் முகவரி தேடி வெளிச்ச ரேகைகள் வரவிருக்கிறது என்பதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இதற்கு கோடு போடவர்களுக்கும் அதை பாதையாக மாற்றியவர்களுக்கும் அதையே இப்போது ரோடாக மாற்றியவர்களுக்கும் வரும் காலங்களில் இதை நெடுஞ்சாலையாக்க போகிறவர்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துகளும்.

நம் பிரச்சினைகளை பேசுகிறோம் அவலங்களை முன் வைக்கிறோம் என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பேசுவோம்.

முதலில் நமது சமூகம் எப்படி விடுதலைபெறலாம் என்பதை பற்றி கொஞ்சம் கோடு போடலாம் இதில் அநேக விடயங்கள் தவிர்க்க முடியாத படி ஒன்றுக்கொன்று பின்னி பிணைந்திருக்கின்றன, ஒன்றை விட்டு ஒன்றை தீர்க்கமுடியாத பெரும் சிக்கல்கள் இருக்கின்றன என்பது மறக்கமுடியாது.

என் அறிவிற்கு எட்டியவரையில் எனக்கு தெரிந்தவைகளை என்ன செய்யலாம் என்று ஒவ்வொன்றாக எழுத முனைகிறேன். நம் மக்களின் சமூக அக்கறையுள்ளவர்கள் மற்றும் தலைவர்கள் கண்களில் பட்டால் கொஞ்சம் விவாதித்து பாருங்கள்.

முதலில் இம்மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரப்படத்தபடுல் முக்கியம்.
மலையக மக்கள் அனைவருமே பெருந்தோட்ட பயிர்செய்கை பிரிவில் அடங்குகிறவர்கள், தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களில் தான் பணிபுரிகிறார்கள். இவர்களது ஊதியம் அதாவது வருவாய் என்பது ஒரு நிரந்தரமற்றது. வேலைக்கு போனால் சம்பளம் இல்லையேல் இல்லை என்ற நிலை.

பெருந்தோட்ட தொழிற்துறை அரசாங்கத்தின் கைகளில் இருந்த காலத்தில் இம்மக்கள் பொருளாதார நிலையில் தன்னிறைவை எட்டாவிட்டாலும், இல்லை என்ற சொல்லிற்கு இடமில்லாது வாழ்ந்தார்கள். அந்த காலங்களில் அதாவது 80களின் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தை சற்று நிறுத்தி, தம்மை திரும்பி பார்க்க வைக்ககூடிய நிலையில் இச்சமூகம் இருந்தது என்றால் மிகையில்லை. நடந்த போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் என்பன இதற்கு சான்றாகும்.

இதன் காரணமாக அன்றைய அரசியல் இவர்கள் வாழ்கையில் விளையாட தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்கையை அவர்களது திட்டத்தை ஆட்டி பார்க்க திட்டமிடப்பட்டது. இத்தனைக்கும் இலங்கை உலகிலேயே தேயிலை ஏற்றுமதியில் முதன்மை நாடாக திகழ்ந்தது மேலும் இலங்கை தேயிலைக்கு தான் உலக சந்தையில் நல்ல விலை கிடைத்திருந்தும்.

83ல் இடம் பெற்ற இலங்கையின் இனக்கலவரத்தில் தென் மாகாணம், ஊவா மற்றும் சப்பிரகமுவா மாகணத்தில் பெருந்தோட்ட துறையில் இருந்த தொழிலாளர்கள் அநேகர் கொலைசெய்யப்பட்டார்கள், விரட்டியடிக்க பட்டார்கள் அல்லது இடம்பெயர சூழ்நிலையால் நிர்பந்திக்கபட்டார்கள். தோட்ட உரிமையாளர்கள் தமிழராய் இருந்தபட்சத்தில் மொத்தமும் சூரையாடப்பட்டது.

இலங்கை அரசின் பொருளாதாரம் தேயிலை ஏற்றிமதியில் தங்கியிருக்க கூடாது, என்ற கருத்து அப்போதே இலங்கையில் ஆளும்வர்க்கத்தினருக்கு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக தேயிலை தோட்டங்களை தனியார் மயப்படுத்தியது…. அநேக தோட்டங்கள் மூடப்பட்டன.

பெருந்தோட்டங்களில் ஒவ்வோர் தோட்டத்திலும் அதன் விளைநில பரப்பளவிற்கு தகுந்த விகிதாசாரத்தில் தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை, அப்போது தான் அங்குள்ள மக்களுக்கு மாதம் முழுவதுமாக (அதாவது 26 நாட்களும்) வேலை பார்க்க கூடிய நிலையிருக்கும். தொழிளாளர் அளவு அதிகம் ஆகும் போது அனைவருக்கும் மாதம் முழுதும் வேலை தருதல் என்பது இயலாத ஒன்றாகிறது…. தினக்கூலி என்ற அடிப்படையில் அம்மக்கள் இருக்கும் போது மாதத்தில் வேலை நாட்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது இங்கு சொல்லித்தெரிய தேவையில்லை.

ஆக இந்த நிலை அங்குள்ள நிர்வாகத்திற்கு மிகுந்த சாதகமாக மக்களை பிரித்தாளுவது என்ற ஒரு உந்து சக்தியை கொடுக்கிறது. இந்த வகையில் தோட்ட நிர்வாகத்திடம் தொழிலாளர்களின் சுதந்திரம் உரிமை என்பது முற்று முழுதாக அடகு வைக்கப்படுகிறது.

மேலும் தனியார் மயப்படுத்திய பின்னர் சிறந்த முகாமைத்துவம் மறுசீர் அமைப்பு என்பன துளியும் அற்று போய்விட்டன. மேலும் தனியார் மயப்பட்ட தோட்டங்களில் தேயிலை தவிர்ந்த மாற்று பயிர்களை தேயிலை விளை நிலங்களில் பயிர் செய்வது என்ற புதிய உத்தி கையாளப்பட்டது. ஆகவே இதனாலும் அந்தந்த தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களின் மொத்த வேலை நாட்கள் குறையும்.

ஆக அம்மக்களின் தொடர் வருவாய் ஆட்டம் கண்டு விடும். ஆக வாழ்வியல் போராட்டத்திற்கு மத்தியில் மறுமலர்ச்சி பற்றி எப்படி ஒரு சமூகம் சிந்திக்கும்?

அதை சிறப்புற செய்து முடித்திருக்கிறது இலங்கையின் ஆளும் வர்க்கம். அதில் பெரும் சோகம் என்ன வென்றால் இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் சங்கங்களும் விலை போனது தான் சோகத்தின் உச்சம்.

ஒன்றாக இருந்த தொழிற்சங்கங்கள் துண்டாடப்பட்டன. (இது வேறு கதை இதை வேறாக எழுதலாம்). போதாதற்கு அதற்குள் எத்தனை பிரிவுகள் கட்சிகள் அதற்குள் எத்தனை போட்டிகள் பொறாமைகள், தமிழினத்திற்கே சாபமாய் போன ஓற்றுமையின்மை இத்தியாதி இத்தியாதி.

என்ன செய்யலாம்?

முதலில் இம்மக்களின் ஊதியம் நிரந்தரப்படுத்தப்படல் அவசியம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களின் ஸ்திரபட்ட வருவாய் என்கிற முதல் அம்சத்திற்கான வழிதிட்டங்கள் வகுக்கபடுதல் அவசியம்.

தொடரும்.......!

நவம்பர் 05, 2008

மாற்றம் வருகிறது.

பூமி பந்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்று போற்றப்படுவதும், வாய்புகளின் இருப்பிடம் என்று கூறப்படுவதுமான அமெரிக்காவில் இன்று ஓரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது… எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் இது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக திரு. பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்,

அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை., அமெரிக்க வெள்ளை இனத்தவர் மத்தியில் ( பரவலாக இல்லாவிட்டாலும் அது தான் உண்மை) ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர சமூகமாக கருதப்படும் ஒரு சமூகத்திலிருந்து அந்நாட்டை 21ம்நூற்றாண்டின்; பாதையில் நடத்தி செல்ல ஒரு தலைவனை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரை நான் 90 களில் பார்த்திருக்கிறேன் ROOTS (வேர்கள்)என்று.
எப்படி ஆபிரிக்க கறுப்பினத்தவாகள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன என்ன, பின்னாளில் இவற்றிலிருந்து எப்படி இம்மக்கள் விடுதலை ஆனார்கள், எவ்வாறு அந்நாட்டின் குடிகளானார்கள் என்று இருக்கும்.

இவ்வாறு நிற வெறியினால் பீடிக்கப்படடு இருந்த அமெரிக்கர்கள் இன்று நிறம், மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து இன்று ஒன்று பட்டு நிற்பதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் ஒடுக்கப்பட்ட சமூகம் எங்கும் எந்த காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழாது என்பதாகும்.

இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி ஆரவாரம் என்பவற்றை பார்க்கும் போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. அதே நேரம் மனசுக்குள் சற்று பயமாகவும் இருக்கிறது. இவ்வாறாக காட்டப்படும் பெரும் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொள்ளும் கயவர்களும் பாதகர்களும் இருப்பார்கள், மாற்றம் கொண்டுவர மாறுதலாய் வந்த நிற்கும் இம் மனிதனுக்கு இவர்களால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று.

ஏனெனில் பழைய அமெரிக்க வரலாறுகளை எடுத்து பார்த்தால் நல்ல ஆட்சியாளர்களை அந்த நாடு நெடுநாட்கள் கொண்டிருந்ததில்லை.

ஏற்கனவே செய்திகளில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டார்கள் என்று கூறி இருவரை கை செய்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன் பி.பி.சி செய்திகளில் சொல்லப்பட்டது. அதற்கு பின் அந்த செய்தி அப்படியே இல்லாது போய்விட்டது.

எந்த தொந்தரவுகளும் ஆபத்துகளும் நேராது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்கவும், ஒடுக்கபட்ட சமூகம் என்ற பெயரில் இருந்த ஒரு இனம் புதிய யுகம் காணவும், அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவும் வாழ்த்தி நிற்போம்.!

நகைச்சுவை

ஒரு சிறு மாறுதலுக்காக படித்ததில் சுவைத்ததை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்
முத்துகமலம் என்ற இணையதளத்தில் நகைச்சுவை பகுதியில் படித்தது.

நன்றி தேனி.எஸ்.மாரியப்பன் - இணையத்திற்கு செல்ல




தபால்காரர் போயிட்டாரா...?

ஒருவர் பல ஆண்டுகள் தபால்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வந்திருந்த நண்பர்,
"உன்னைப் போல அரசாங்க வேலை பார்த்து ஓய்வு பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார்.

அதற்கு அந்த தபால்காரர்,

"ஆமாம் நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். தபால்காரன் வேலை ஒரு வேலையா? காலையில் தபால் ஆபிஸ்க்கு வருகிறவர்கள் "தபால்காரர் போயிட்டாரா?" என்று விசாரிக்கிறார்கள். அதாவது பரவாயில்லை... மாலையில் தபால் ஆபிஸ் வருபவர்கள் "என்ன எடுத்தாச்சா?" என்று விசாரிக்கிறார்கள்." என்று எரிச்சலோடு சொன்னார்.