அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 20, 2012

இலங்கையும், - இனக்கலவரமும்

என்னத்த சொல்ல....!,
இலங்கையை பொறுத்தவரையிலும், அதன் பிரச்சினையை பொறுத்தவரையிலும், சர்வதேச சமூகம், அப்படி இப்படி என்பதெல்லாம் வெறும் புண்ணாக்கு அவ்வளவு தான். மொத்த பூமிபந்தில் உள்ள ஆதிக்க நாடுகளும் சரி, ஆதிக்கத்தை வலுபடுத்த உருவாகும் நாடுகளும் சரி… நம்மை (இலங்கையை) பார்ப்பது இந்த இளிச்ச வாயன்களை எப்படி பயன்படத்திகொள்ளலாம் என்பதை பற்றி மட்டுமே!...

கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்து. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.

சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை) 

அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.

இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!

சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.

கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!

(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாம், நம் இலங்கை தன் இனங்கள் சார்பில் அது கற்று வந்த பாடங்கள் 1968 லிருந்து இன்றுவரை யாரும் தெரியாதது அறியாதது அல்ல.

நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்

திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)

சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

நானொரு முட்டாளுங்க - ரொம்ப நல்லா தெரிஞ்சவுங்க நாலு பேரு சொன்னாங்க”!....

ஏப்ரல் 05, 2011

2 கோடி மக்கள் மற்றவர்களை மகிழ்விக்க

இலங்கை 2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.
இத்தனை சின்னநாடு 120 கோடி இந்திய மக்களை மகிழ்ச்சி அடைய செய்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்……..

இப்படி தான் இலங்கை ஜனாதிபதி கிரிகெட் வீரர்களுக்கான தனது விருந்துபசார நிகழ்வில் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. 

என் தனிபட்ட கருத்து என்னவெனில்

மார்ச் 30, 2011

நல்ல விதைகளை விதைப்போம்… நாம் நல்ல தேசம் செய்வோம்

ஆங்கிலத்திலும் தமிழிலும் இரு வேறு வலைபதிவர்களின் பதிவை தொகுத்து, ஒரு பதிவாக வந்த ஒரு மின்னஞ்சலை பதிவிடுகிறேன்…

என்று பெறப்போகிறோம், இப்படிப்பட்ட குணாதிசயங்களை/நற்பண்புகளை?

பாருங்கள்……
மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்….

மார்ச் 08, 2011

எனது பள்ளிப்பருவ கிறுகல்கள்






எனது பழைய எழுத்துகளை, அதாவது கிறுக்கல்களை புரட்டிக்கொண்டிருக்கும் போது நான் கவிதை என்று நினைத்து கிறுக்கியவைகள் தென்பட்டன…..

அதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது, ஆனாலும் அந்த வயது கால நிகழ்வுகளை மீட்டி பார்க்க மனசு லேசான மாதிரியும் இருக்கிறது.
அந்த கிறுக்கல்களை உங்கள் பார்வைக்க்கும் வைக்கிறேன்…
பாருங்கள்...

நவம்பர் 10, 2008

அந்த அழியாத கோலங்கள்

நேற்று வீட்டில் பழைய புத்தகங்கள் பைல்களை புரட்டிக்கொண்டிருந்தேன், ஒரு பழைய தமிழ் பாடல் ஒன்றைத்தேடி…. அப்பொது கிடைத்து தான் கீழேயிருக்கும் கிறுக்கல்.

என் நண்பண் ஒருவனுக்காக அவன் கடலை போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கொடுக்க எழுதியது….

முற்றுமுழுதாக தமிழ் திரைப்படங்களின் பெயர்களை மட்டும் கொண்டு ஒரு கவிதை என்று சொல்லி கிறுக்கியது. இப்போது அவன் அந்த பெண்ணையே திருமணம் செய்து செட்டிலாகி விட்டான் குழந்தை குட்டிகளோடு.

மகிழ்ச்சி சந்தோஷம் விளையாட்டுதனம் மட்டுமே நிறைந்த அந்த இளமைபருவ காலம் கோடி கொடுத்தாலும் ஈடு இணையாகாது.

இதோ கிறுகக்ல், பார்த்துவிட்டு நீங்களும் ஏதாவது கிறுக்கிட்டு போங்க


அன்பே!

சிவகாமியின் செல்வன் - உன்
புன்னகை மன்னன்
நான் பாடும் பாடல் - என்றும்
“புதுக்கவிதை” –

என் காதலை
சொல்லத்தான் நினைக்கிறேன் - தினம்
ஒன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
இப்போது….
வைகாசி பொறந்தாச்சு –

ஆகவே...
தென்றலே என்னை தொடு
கண்ணே கனியமுதே! – நீ
நிறம் மாறாத பூக்கள்
ஆலயமணி
குங்குமச்சிமிழ்
கீதாஞ்சலி
சிட்டுக்குருவி
சிந்து பைரவி
சிவப்பு ரோஜா
புதுப்பாட்டு - அப்பப்பா !. . . . .

நினைத்தாலே இனிக்கும்.

கேளடி கண்மணி - அந்த
16 வயதினிலே
அம்மன் கோவில் கிழக்காலே
டார்லிங்! டார்லிங்! – படத்திலே
உன்னை நான் சந்தித்தேன்

அன்றுதான் எனக்கு
முதல் வசந்தம்

உன்,
பருவ மழை -கண்டு
புதுப்புது அர்த்தங்கள் -கொண்டு
நான் பாடிய
இதய கீதம்
புதிய ராகம்
வருஷம் 16 – போனாலும்
கடலோரக்கவிதையாய்
காற்றினிலே வரும் கீத(ம்)மாய் - வந்து
மண் வாசணை வீசும்

அடியே!
அன்னக்கிளி
ரோசாப்பு ரவிக்கைக்காரி
மீரா!...

உயிரே உனக்காக - என்றாய்

மாதங்கள் ஏ(ழு)ழில் - நம் காதல்
இருகோடுகள் - ஆனதென்ன

என் வாழ்வு உன்னோடு தான்- என்றாயே!
திசைமாறிய பறவை யாய் போனாயே
ஏன் ஏன்?

அரண்மணைக்கிளியே
பார் மகளே பார்
வசந்த மாளிகையை

இப்போது உன்
பூ விலங்கு
நாயகன்
சுவரில்லாத சித்திரங்கள்
பாலைவன ரோஜா
மூன்றாம் பிறை

வாழ்கை – இப்போது எனக்கு
புரியாத புதிர் –
பகலில் ஓர் இரவு

ஆகா!
அந்த 47 நாட்கள் - என்றும்
அழியாத கோலங்கள்