அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 20, 2012

இலங்கையும், - இனக்கலவரமும்

என்னத்த சொல்ல....!,
இலங்கையை பொறுத்தவரையிலும், அதன் பிரச்சினையை பொறுத்தவரையிலும், சர்வதேச சமூகம், அப்படி இப்படி என்பதெல்லாம் வெறும் புண்ணாக்கு அவ்வளவு தான். மொத்த பூமிபந்தில் உள்ள ஆதிக்க நாடுகளும் சரி, ஆதிக்கத்தை வலுபடுத்த உருவாகும் நாடுகளும் சரி… நம்மை (இலங்கையை) பார்ப்பது இந்த இளிச்ச வாயன்களை எப்படி பயன்படத்திகொள்ளலாம் என்பதை பற்றி மட்டுமே!...

கடந்த 30 வருட காலமாக பிரச்சினை இருந்தாலும் ஒரு 20 வருட காலமாக தான் யுத்தம் நடந்து கொண்டிருந்து. அப்போது நினைத்திருந்தால் இந்த புண்ணாக்கு சமூகம், இப்போ எடுக்கிற ஒரு கடும் போக்கை அப்போது எடுத்து இரண்டு பேரையும் அழைத்து ஏதாவது பண்ணியிருக்கலாம், பண்ணவில்லை ஏன்? அப்போது அவர்களுக்கு தேவை தனது ஆயுதங்களை சந்தை படுத்த ஒரு இடம், பத்தோடு பதின் ஒன்றாவதாக ஒரு ஒரு இடம் இருக்கிறது ஆகவே இரண்டு பக்கமும் விற்று முடிந்தவரை காசு பார்க்கலாம் என்ற எண்ணம்.

சரி பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று நடந்தது ஞாபகம் இருக்கலாம் அப்போது சரி யாராவது இந்த புண்ணாக்குகள் வந்து மத்தியஸ்தம் பண்ணியிருக்கலாம், அல்லது தொடந்த பேச்சு வார்தைக்கான ஒரு பாதையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போதெல்லாம் அவர்களுடைய எண்ணம், இது உள்நாட்டு பிரச்சினை, அவர்களாகவே தீர்த்து கொள்ளட்டும் என்பதான நடிப்பு. பேச்சு வார்த்தை முறிந்தபோது கூட ஒரு மூச்சும் இல்லை இந்த சமூகங்களிடமிருந்து. (நோர்வே மட்டும் வந்து போனது அது வேறு கதை) 

அடுத்தது இறுதி கட்ட போரின் போது இதே ஆதிக்க நாடுகள், வடபகுதியிலிருந்து பொதுமக்களுக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மற்றும் செஞ்சிலுவை சங்கம் போன்றவை தனது செயற்பாடுகளை நிறுத்தி வெளியேறுகையில் அந்த மக்கள் கதறினார்களே எங்களை விட்டு போக வேண்டாம் என்று அப்போது எங்கே போயின?. அப்படி அவர்கள் அங்கிருந்திருந்தால் பொது மக்களுக்கு நேர்ந்த பரிதாபங்களை தவிர்த்திருக்கலாம். நடந்தது படுகொலை இன சுத்திகரிப்பு என்றெல்லாம் இப்போது கொக்கரிக்காமல் வேறு வேலைகளை பார்த்திருக்கலாம்.

இப்போது மட்டும் எதற்கு இந்த ஆடுபுலி ஆட்டம் எல்லாம், இலங்கைக்கு உதவவா? அப்படி நாம் நினைத்தால் மீண்டும் தமிழனுக்கும் இலங்கைக்கும் வெவ்வே!

சமகால உலக வர்த்தக, அரசியல், பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு ஆதிக்கம் போன்றவற்றில் கடந்த ஓரிரு வருடத்தில் உலகம் முழுவதிலம் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளமை கண்கூடு. ஆகவே ஆசியபிராந்திய, அரசியல், வியாபார, ஆதிக்க, இராணுவ நெறிபடுத்தல், போன்றவற்றிற்காக தற்போதைய நம் நிலைமையை வியாபாரம் ஆக்கி குட்டையை குழப்பி குழம்பிய நீரில் மீன்பிடிக்க தான் இந்த திட்டம், தீர்வு அல்லது சாட்சியில்லாத, நிரூபிக்க முடியாத முதலை கண்ணீர் எல்லாம்.

கடைசியில் நண்பனாய் இருந்த அல்லது இருக்கிறதாய் காட்டிய அல்லது காட்டுகிற அண்டை நாடும் இலங்கை நலனில் தன் லாபநட்ட கணக்குகளை போட்டு பார்த்ததில் இலங்கை பொறுட்டு வரும் லாபத்தை விட மற்ற வகையில் லாபம் அதிகம் இருப்பதாக கண்டு என்னவோ மெல்ல ஜகாவாங்க பார்க்கிறது… என்பது தான் உண்மை. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் நாமும் நமக்குள் பிளவுபடுவதை விடுத்து நம் இருவருமே மனசு விட்டு பேசி நாமே தீர்த்துகொண்டால்……. என்ன!

(நினைக்கவே புல்லரிக்கிறது போகாத ஊருக்கு பாதை போட்ட கதை மாதிரிதான் தெரியும் ஆனால் எதுவும் சாத்தியம்).
நாம், நம் இலங்கை தன் இனங்கள் சார்பில் அது கற்று வந்த பாடங்கள் 1968 லிருந்து இன்றுவரை யாரும் தெரியாதது அறியாதது அல்ல.

நாமும் நம்முள்ளும் தெரியாது போல் பலர் நடிக்கிறார்கள் அல்லது உணர்ந்தும் செயல் பட மறுக்கிறார்கள். இதை அரசாங்கம் உணருமா?... அல்லது அரசாங்கம் என்ற போர்வையில் இருக்கும் பிரிவினைவாதிகள் உணர்வார்களா?.. என்பது தான் விடையில்லாத வினா, இனியும் பிரிவினை பேசினால் கோவணம் கூட மிஞ்சுவது கடினமாகலாம். தகாத வார்த்தைகளை உதிர்வது ஆப்பிலுத்த குரங்குக்கு ஒப்பாகலாம்

திருடராய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்பதற்கிணங்க எல்லாரும் திருந்தினால் (இதில் ஒரு சில தமிழ் பிரிவினை வாதிகளுக்கும் தான்)

சுபீட்ச இலங்கை நிச்சயம்…., அல்லது
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்..

நானொரு முட்டாளுங்க - ரொம்ப நல்லா தெரிஞ்சவுங்க நாலு பேரு சொன்னாங்க”!....

மார்ச் 09, 2011

நல்லா சிரிங்க…..

எப்படியெல்லாம் யோசிக்கிராங்கப்பா……
படத்தை கிளிக் செய்து பாருங்கள், அப்பதான் நல்லா சிரிப்பீங்க! 
இதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
என்னா ஒரு குசும்பு.....

செப்டம்பர் 16, 2010

தீடீர் பதிவு


இப்போதைக்கு இது தான் செய்தி,
பாருங்கள் படத்தை…….
அண்மையில் ஆரம்பமான மத்தியகிழக்கின் சமாதான பேச்சுவார்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்தது அனைவரும் அறிந்ததே!... ஆனால் அதுவல்ல பிரச்சினை… யார் தலைமை தாங்கி எல்லோரையும் அழைத்து சென்றது என்பது தான் இப்போதைய சர்ச்சை!.
 

பிப்ரவரி 11, 2009

வாங்க வந்து பார்த்து எதாவது சொல்லிட்டு போங்க!

ஒரு வேலை கிடைத்தால் தேவலை!



எப்படி இருந்த நான் எப்படி ஆகிட்டேன்!

குறிப்பு
இதுவும் மின்னஞ்சலில் வந்தது தான்,

இதற்கு தான் கண்ணதாசண் சொல்லியிருந்தார்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞசம்
இறங்கி வந்தால் நிழலும் கூட
மிதிக்கும்......

(இது தான் ஊடக சுதந்திரமோ?)
நீங்களும் எதாவது சொல்லிட்டு போங்க!

நவம்பர் 05, 2008

மாற்றம் வருகிறது.

பூமி பந்தின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்று போற்றப்படுவதும், வாய்புகளின் இருப்பிடம் என்று கூறப்படுவதுமான அமெரிக்காவில் இன்று ஓரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது… எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் இது பற்றிய பேச்சாகவே இருக்கிறது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக திரு. பராக் ஒபாமா என்பவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்,

அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை., அமெரிக்க வெள்ளை இனத்தவர் மத்தியில் ( பரவலாக இல்லாவிட்டாலும் அது தான் உண்மை) ஒடுக்கப்பட்டு இரண்டாம் தர சமூகமாக கருதப்படும் ஒரு சமூகத்திலிருந்து அந்நாட்டை 21ம்நூற்றாண்டின்; பாதையில் நடத்தி செல்ல ஒரு தலைவனை தேர்ந்து எடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

ஒரு தொலைக்காட்சி தொடரை நான் 90 களில் பார்த்திருக்கிறேன் ROOTS (வேர்கள்)என்று.
எப்படி ஆபிரிக்க கறுப்பினத்தவாகள் அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்படுகிறார்கள், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்ன என்ன, பின்னாளில் இவற்றிலிருந்து எப்படி இம்மக்கள் விடுதலை ஆனார்கள், எவ்வாறு அந்நாட்டின் குடிகளானார்கள் என்று இருக்கும்.

இவ்வாறு நிற வெறியினால் பீடிக்கப்படடு இருந்த அமெரிக்கர்கள் இன்று நிறம், மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து இன்று ஒன்று பட்டு நிற்பதை பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் ஒடுக்கப்பட்ட சமூகம் எங்கும் எந்த காலத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழாது என்பதாகும்.

இன்று தொலைக்காட்சியில் காட்டப்படும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி ஆரவாரம் என்பவற்றை பார்க்கும் போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. அதே நேரம் மனசுக்குள் சற்று பயமாகவும் இருக்கிறது. இவ்வாறாக காட்டப்படும் பெரும் மக்கள் செல்வாக்கை கண்டு பொறாமை கொள்ளும் கயவர்களும் பாதகர்களும் இருப்பார்கள், மாற்றம் கொண்டுவர மாறுதலாய் வந்த நிற்கும் இம் மனிதனுக்கு இவர்களால், ஏதாவது ஆபத்து நேர்ந்து விடுமோ என்று.

ஏனெனில் பழைய அமெரிக்க வரலாறுகளை எடுத்து பார்த்தால் நல்ல ஆட்சியாளர்களை அந்த நாடு நெடுநாட்கள் கொண்டிருந்ததில்லை.

ஏற்கனவே செய்திகளில் ஒபாமாவை கொல்ல திட்டமிட்டார்கள் என்று கூறி இருவரை கை செய்திருப்பதாக இரு வாரங்களுக்கு முன் பி.பி.சி செய்திகளில் சொல்லப்பட்டது. அதற்கு பின் அந்த செய்தி அப்படியே இல்லாது போய்விட்டது.

எந்த தொந்தரவுகளும் ஆபத்துகளும் நேராது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தனது பதவியை ஏற்கவும், ஒடுக்கபட்ட சமூகம் என்ற பெயரில் இருந்த ஒரு இனம் புதிய யுகம் காணவும், அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படவும் வாழ்த்தி நிற்போம்.!