ஜூலை 14, 2015

அஞ்சலி






இனிமேல் இந்த பூமிபந்து இன்றைய ஜுலை பதிநான்காம் திகதியை தன் வாழ்நாள் உள்ள வரை மறக்க போதில்லை. காரணம்
தமிழிசைக்கு தன் திரையிசையால் முண்டாசு கட்டி அழகு பார்த்த ஒரு மாமேதை, ‘மெல்லிசை மாமன்னர்’ என்று போற்றப்பட்ட எங்கள் எம்எஸ்வி என்ற சகாப்தம் இசையை துறந்த நாள்…, இசையை சுவாசிக்க மறந்த நாள், பல்லாயிரகணக்காண இசை ரசிகர்களை உடலால் பிரிந்த நாள்……

இசைஞானிக்கு இசைவித்திட்டவரே
இன்னோறென்ன இசை கலைஞர்களுக்கும்
இசைவித்தகருக்கும் பாடகர்களுக்கும்
பாட்டுகாரர்களுக்கும் (இசைச்) சோறு
போட்டவரே 
சங்கீதம் தெரிந்ததை விட மிக அதிகமாக
இங்கிதம் தெரிந்தவரே!

ஐயா!
உலகம் உள்ள வரை உம் பெயர் நிலைக்கும்
ஒரு வேளை அது அழிந்து மீண்டு
உயிர்த்தாலும் – அந்த பொழுதும்
உங்கள் பெயரும் இசையும் வாழும்…..
எம்எஸ்வி ஒரு சகாப்தம்
எம்எஸ்வி ஒரு வரலாறு
எம்எஸ்வி ஓரு இனத்தின் இசை முகவரி
தமிழ் என்ற சத்தம் உள்ளவரை
ஓயாது உங்கள் இசை
மறக்காது உங்கள் நாமம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்!!
விடைதருகிறோம் போய் வாருங்கள்
மீண்டும் சந்திப்போம்.













ஓர் ஏகலைவனின் கண்ணீர் அஞ்சலி.