மே 31, 2022

என் மனதில் பட்டது

 இன்று ஒரு பத்திரிகையில் வந்த  செய்தி

74 வயதில் கணிதபாட பரீட்சை எழுதிய முதியவர்!

மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு செய்தி ஆனால் இதை சற்று ஆழமாக யோசித்தோமா?

கணித பாடம் தான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறதா?  கணிதம் எனக்கு சரியாக வராது என்றால் நமக்கு வாழ்கை அவ்வளவு தானா? இலங்கை கல்வி முறைமையை பொருத்தவரை இது தான் நியதி. இது எவ்வளவு தவறான  முறைமை அல்லது கொள்கை என்பதை ஏன் இன்றுவரை யாருமே உணர மறுக்கிறோம். இதனால் எத்தனை பேர் வாழ்கையில் தான் நினைத்தை செய்ய முடியாது போயிருக்கிறது.

இது திட்டமிட்டசதியா? அல்லது அலட்சிய போக்கா? தெரியவில்லை. அந்த பரீட்சாத்தி ஒரிடத்தில் “ நான்கு திறமை சித்திகள் பெற்றிருந்தேன். பெற்றாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.” என்று கூறுகிறார். எவ்வளவு வேதனையான விடயம்.

கணக்கியல் அல்லாத எந்த ஒரு துறைக்கும் கணக்கு அவசியமே இல்லை. அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவணுக்கு அடிப்படை கணித அறிவு நிச்சயம் இருக்கும்.
மேலும் கணக்கியல் இன்றி முடியாது என்று துறைககள் உள்ளது, பொறியியல், கணணி, துறை போன்றவை. ஆனால் வைத்திய துறைக்கு கூட பெரிய கணித அறிவு தேவைபடாது என்றே சொல்வேன்.
  அடிப்படை கணித அறிவு இருந்தாலே போதும் துறைசார் தகைமைகளை படித்து தேர்ச்சி பெறும் போது வைத்திய துறைக்கான அதற்குறிய கணித அறிவு அந்த நபருக்கு தேவையான அளவு வளர்ந்து விடும் அல்லது வளர்த்துக் கொள்ளலாம்.

மேலும் கணித பாடத்தில் சித்தியில்லை என்றால் ஒரு நபரால் ஒரு காசாளராக (கேசியர்) வேலை பார்க்க முடியாதா? வரவையும் செலவையும் எழுதி மிகுதி பணத்துக்கு பொறுப்பு கூற முடியாத அவ்வளவா முட்டாளாக இருப்பார்கள்?

ஆனால் இலங்கையில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களை பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும். “ சில நேரம் ஒரே தடவையில் கணித பாடத்துடன் ஆறு பாடங்கள் அல்லது ஐந்து பாடங்கள் சித்தியடைந்திருத்தல்”  என்று வரும் கணிதம் அத்தனை அவசியமே இல்லாத ஒரு துறைக்கு.

ஆக இந்த கணக்கை வைத்து எவ்வளவு பெரிய தப்புகணக்கு போடுகிறார்கள்.

உலகில் மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் இப்படிதானா செய்கிறார்கள். அங்கெல்லாம் கல்வி முறை வேறு அது “மக்களை வாழவைக்கும் கல்வி முறை” இங்கு தான் இப்படி.

கைத்தொழிலில் கொடிகட்டி பறக்கும் சீனாவில் நாம் வாங்கி பாவிக்கும் சின்ன சின்ன இலக்ட்ரோனிக் சாதனங்கள்,மற்றும் விளையாட்டு பொருட்களை குடிசைக் கைதொழிலாக செய்கிறார்கள், அதில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் கணித மேதாவிகளா? … கணித பாடமே இல்லாமல் வாழ்கையில் ஜெயித்தவர் பட்டியல் கொஞ்சமல்ல.

வாழ்கைக்கு கல்வி மிக அவசியம் இதில் கணிதம் தெரிந்தால் தான் கல்வி, இல்லையென்றால் வாழ முடியாது ஜெயிக்கவும் இயலாது என்றால் அப்போது மற்றவைகள் எல்லாம் என்ன புண்ணாக்கா?.... 
கொஞ்சம் யோசிங்க! 

நன்றி! 

மே 09, 2022