ஆகஸ்ட் 23, 2005

ஊடகங்களின் சுதந்திரமும் அதன் எதிர்காலமும்.

இன்னொரு ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டலா?

இன்று காலை வெக்டோன் தழிழ் தொலைக்காட்சியியில் விடியல் நிகழ்ச்சியில் பத்திரிகைச்செய்திகளை பார்கமுன், இரண்டு இணைய செய்திகளை வாசித்தார்கள்.

"நிதர்சனம்" என்ற தளத்திலும், "நெருப்பு" என்ற தளத்திலும் வெளியாகியிருந்த இரு செய்திகளே அவை.

அதில் "நெருப்பு" இணைய தளம் திரு.தயானந்தாவுக்கு கொலைமிரட்டல் என்று தமக்கு செய்தி கிடைத்திருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது என்றும்,

"நிதர்சனம்" என்ற தளம் வெக்டோன் தொலைக்காட்சி தனது செய்தியில் இலங்கையின் திரு.ஆனந்தசங்கரியினை அழைத்து (பாராளுமன்ற அங்கத்தவர் என்று நினைக்கிறேன் நமக்கு ஏதுங்க? அரசியலும் அறிவும்,) சுடரொளி பத்திரிகையின் கொழும்பு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக அவரை சம்பந்தப்படுத்தியிருப்பதை பற்றி அவரது கருத்தை கேட்ட போது, அவர் இது குறித்தும் தமிழர் தாயகம் குறித்தும் சொன்ன ஒரு கருத்தாடலை ஒளிபரப்பியது மிகத்தவறானது என்ற பார்வையில் மிகவும் காரசாரமாக விமர்சித்து இருந்ததாகவும், வெக்டோனின் இந்த செய்தியால் உலகம் முழுக்க வாழும் தமிழர் மத்தியில் அந்த தொலைக்காட்சி பற்றி ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், குறிப்பிட்டு இருக்கிறது என்றும் வாசிக்க பட்டது.

இதன் செய்திகளை வாசிக்க தளங்களின் பெயர்களை கிளிக்கினால் செய்திகளை வாசிக்கலாம். ஆனால் இப்படி உரல் தொடுப்பு கொடுப்பது சரியா தவறா தெரியவில்லை, ஏனென்றால் இப்போதெல்லாம் நாளுக்கு நாள் பதிது புதிதாக இணைய தளம், கணணி, சம்பந்தபட்ட சர்வதேச சட்டங்கள் நிறைய வருகின்றன... (அதெல்லாம் இந்த கிறுக்கனுக்கு தெரியாதுங்க!. ஆகவே தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நான் நீக்கிவிடுகிறேன்,)

" நிதர்சனம் " ,

" நெருப்பு ".

நானும் பார்த்தேன் "கேணயன்கள்" போன்ற நாகரீகமான!!!! பதங்கள் எல்லாம் பயன் படுத்த பட்டிருக்கின்றன....

அதற்கு திரு.தயானந்தா பேசும் போது திரு.ஆனந்தசங்கரி கொழும்பு கலையகத்திலிருந்து கொண்டு இந்த கருத்தை சொல்லவில்லை அது எங்களுக்கு தெரியாது என்றும், இது லண்டனிலிருந்து நேரடியாக அவரோடு பேசப்பட்டது என்றும், ஆனாலும் யாராவது ஒருவரை அழைத்து பேச வேண்டி வந்தால் எங்களுக்கு தெரியும் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று... என்று விளக்கம் அளித்தார்,,,,,


சரி நான் எழுத வந்தது என்னவென்றால்:

இன்றைய உலகில் யாருக்கும் தனது சொந்த கருத்தை சொல்ல உரிமையில்லையா?... மேலும் ஊடகங்கள் இதை வெளியிடுவது தவறா?

ஒரு நாட்டில், அல்லது ஒரு சமூகத்துள், ஒரு விடயத்தில், அல்லது ஒரு கொள்கையில், அங்குள்ள அது சம்பந்தபட்ட ஒவ்வெருவரிடத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு, அல்லது பார்வை இருக்கும். இது தவிர்க்க முடியாதது, இது அவரவர் அது பற்றி கொண்டிருக்க கூடிய அல்லது அறிந்திருக்க கூடிய விபரங்கள், தகவல்கள் மற்றும், அது பற்றிய அறிவு, போன்றவையால் வருபவை. இது சிலநேரம் தனிமனித சுய லாபமாகக்கூட இருக்கலாம், சரி இதற்காக நீ உன் கருத்தை சொல்லகூடாது என்பது சரியா?. இது மனித குல சுதந்திரம் ஆகுமா?. குரல்வளையை நசுக்குவது போல தானே!

இந்த விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்புகள் பக்கம் சார்ந்தனவாக இருக்கலாமா? எல்லாரின் கருத்துகளையும் ஒளிபரப்புவதில் அல்லது சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்...,

ஒருவர் சொன்ன கருத்து பிழையென்றாலோ?, அல்லது அது சொல்லபட்ட விதம் பிழையென்றாலோ?, எதிரானது என்றாலோ? அதை திருத்தி அல்லது அதை மறுத்து இன்னொறுவர் தனது நிலைபாட்டை வெளிப்படுத்தலாம், இதை விட்டு அவர் கருத்தை ஒளிபரப்பிய ஊடகத்தை குறை கூறுவது சரியில்லை என்றே எனக்கு படுகிறது.

திரு.தயானந்தாவுக்கு உண்மையிலேயே கொலை மிரட்டல் வந்ததா இல்லையா தெரியவில்லை, அதை அவரும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அப்படியே உண்மையாக இருந்து, உண்மையிலேயே இவ்வாறாக எல்லாரையும் கொலைசெய்து கொண்டே போனால் பிறகு உலகில் எப்படி கருத்து சுதந்திரம் இருக்கும்?.... இப்படி பார்த்தால் துப்பாக்கிகள் கொண்ட உலகம் மட்டுமே மிஞ்சும் போல் தான் இருக்கிறது.

என் கருத்துக்கும் கொள்கைக்கும் யாராவது முரண்பட்டால் கொலைதான் என்றால், அறிவு, நாகரீகம், அறிவியல், கலாச்சாரம், எல்லாம் என்னாவது அது வெறும் வார்தை மட்டுட்ம்தானா?

அதேநேரம் முக்கியமாக நமது தமிழ் இனம் மட்டுமே இப்படி அடித்துக்கொண்டு அழிந்து போகுமோ என்ற பயமும் கூடவே வருவதையும் உணர முடிகிறது. அப்படியானால் நமக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமலேயே போய்விடுமே!. நமக்குள்ளேயே அடித்துக்கொண்டு நமது சமூகம் சுருங்கி போகுமானால் இது உண்மையில் எதிரிக்கு தானே சாதகமாகும், ஏன் நாம் இதை உணர மறுக்கிறோம்? பிறகு எங்கே நாம் பலம் வாய்ந்த சமூகமாக வரமுடியும். சுதந்திர காற்றை சுவாசிக்கமுடியும். தொடர்ந்தும் நம்மை நாமே காட்டிக்கொடுத்தது போல தானே ஆகும்.

காலணித்துவ நாடுகள் தான் தாங்கள் கால் பதித்த நாடுகளி்ல் இந்த பிளவை வேண்டுமென்றே ஏற்படுத்தியிருக்கின்றன...., இன்னும் அதையே செய்கின்றன. ஆனால் அவைகளிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும் நாம் இதையே தொடர்ந்தும் கைக்கொண்டு நமக்குள்ளேயே பிளவுபடலாமா?

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இதற்காக நமக்குள்ளேயே நாமே வேரறுத்தக்கொண்டால் யாருக்கு லாபம். நமது பிரச்சினை நீடிக்க நீடிக்க, நமது தமிழ் இனம் இன்னும் தொடர்ந்து நாடோடியாகவே புலம் பெயர்ந்து தானே வாழ்ந்து வரும். இது நம் வருங்கால தமிழினம் முற்றாக அழிந்து போக வாய்ப்பாக அமைந்து விடாதா?, எப்போது நாம் நமக்குள்ளேயே ஒற்றுமையொன்றை எதிர்பார்ப்பது.

பிறகு நமக்கு சுதந்திரம் வந்து என்னத்தை செய்ய? அப்போது அந்த காற்றை சுவாசிக்க ஒரு தமிழன் கூட இருக்கமாட்டானே. நாம் என்ன தொடர்ந்து இப்படியே ஆயிரம் ஆண்டுகள் இருந்து விடுவோமா? தமிழனுக்கு பிறந்த தமிழ் மறந்து போன ஒரு புது கலப்பு சமுகம் அல்லவா தோன்றும் அது நமது தமிழை தமிழ் கலாச்சாரத்தை எந்த மொழி பேசி காப்பாற்றும்? சற்று யோசிக்க வேண்டாமா?

மேற்கு நாடுகளில் 18 வயதை தாண்டிய குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயப்படுத்த முடியாது..., அப்படியே இந்த தலைமுறையை நம் தமிழ் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி தம் கட்டுக்குள் வைத்தாலும் அடுத்த தலைமுறையை எப்படி தமிழுக்குள் கொண்டு வரமுடியும்?

கொஞ்சமாவது எதிர்கால தமிழின் அல்லது தமிழனின் ஒற்றுமை பற்றி யாராவது யோசித்தால் என்ன? என்று எனக்கு படுகிறது.

இவ்வாறு இவர்கள் தங்களுக்குள் உணர்ச்சிவசப்பட இன்னொரு காரணமும் இருக்கிறது போல எனக்கு தொன்றுகிறது,

இப்போது வெக்டோன் தொலைக்காட்சி, இலவச ஒளிபரப்பாக இருக்கிற காரணத்தால் அநேகம் பேர் பார்க்க கூடியதாக இருக்கிறது, ( அதுவும் செப்டம்பர் முதலாம் திகதி வரையில் தான்) மற்ற தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாம் கட்டண தொலைக்காட்சிகள்.

ஆக அந்த அந்த தொலைகாட்சிகள் தான் அளிக்கும் கவர்ச்சியான நிகழ்ச்சிகளை பொறுத்தே அதன் ரசிகர் கூட்டம் கவரப்படும், வியாபாரம் ஆகும், கூட்டம் இருக்கும். அப்போது அந்த தொலைகாட்சியின் கொள்கைகளும் ஆதரிப்புகளும் தான் அதன் ரசிகர்களுக்கு நியாயபடுத்தி காட்டப்பட வாய்ப்பிருக்கிறது. அப்போது மக்கள் மத்தியில் பரந்த நோக்கம் கொண்ட கருத்துகள் வளரவோ இருக்கவோ வாய்புகள் மிகக்குறைவு.

இதுவும் மக்களை பிரித்தாளும் ஒரு தந்திரம் தான், மேலும் இதுவும் மக்கள் தங்களுக்குள் பிளவு பட வாய்பளிக்கும் என்பதை பார்க்க மறுக்கிறோம்.

நன்றாக உற்று நோக்கினால் ஏறக்குறைய எல்லா தமிழ் தொலைக்காட்சிகளுமே இதை தான் செய்கின்றன, தமிழக தொலைகாட்சிகள் முதற்கொண்டு,

இதே வேலையை இலங்கையின் பெரும்பான்மை சமூக தொலைகாட்சிகளும் செய்கின்றன. ஆனால் அவர்கள் ஒரு விடயத்தில் ஒற்றுமை காக்கிறார்கள் தமிழர் குறித்த பிரச்சினையில் எல்லாருமே ஒரு பக்கம் இதனால் தான் பெரும்பான்மை சமூகம் இன்னமும் தமிழன் பிரச்சினையளவில் ஒரே முகத்துடன் இருக்கிறது.


மற்றும் ஏதாவது ஒரு ஊடகம் வாயிலாக ஏதாவது ஒரு கருத்து மக்களை போய் சேருகிற போது...., அது ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டு மற்ற தமிழ் ஊடகங்கள் சற்றே யோசிக்கின்றன என்றே படுகிறது. அதற்காகதானோ என்னவோ இவ்வாறான நடவடிக்கைகள்.

இதற்காக கொலை தான் முடிவு என்றானால்?...... உலகம் எங்கு போகும்.? தமிழன் என்ன ஆவான்....,

என் புத்திக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.!

சிந்தை தெளிந்து
வஞ்சம் தவிர்த்து - தமிழன்
ஒன்றுபடும் காலம் வருமா?....

3 கருத்துகள்:

P.V.Sri Rangan சொன்னது…

பாராட்டத்தக்க பதிவு!ஆரோக்கியமான ஏக்கம்.காத்திருப்போம் கனவுகளோடு.காலத்தில் வாழ்வதுகூடும்போது கட்டாயம் கனவுகளும் நிஜமாகும்.

ஜோசப் இருதயராஜ் சொன்னது…

ஐயா!
ஜனநாயகம்
நன்றிகள்,

பெயரில்லா சொன்னது…

அன்பு நிறைந்த காலக்கிறுக்கனுக்கு காலம் கடந்து எழுதும் ஒரு பதில். வெக்ரோன் விடயத்தை இப்படி ஒருவர் பதிவு செய்திருப்பதை இன்றுதான் பார்த்தேன் நீங்கள் பதிவு செய்த அதே காரணி ஒரு தொலைக்காட்சியின் மூடுவிழாவுக்கு வழிகோலியது.
குளம் ஒன்றும் குண்டிகளை நம்பி இல்லை, ஆனால் போற போக்கில் இந்தக் குண்டிகள் என்னாகப் போகுது என்பதுதான் தெரியவில்லை?