பிப்ரவரி 07, 2005

தமிழகத்தின் காந்தி

17-01-2005,

தொலைகாட்சி ஒன்றில், "காமராஜர்" என்ற ஒரு திரைபடத்தை பார்க்க வாய்பு கிடைத்தது,
திரு.காமராஜரை பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.... அவ்வளவாக தெரிந்து கொள்ள எனக்கு வழிகாட்டியும், அறிவும், வாய்பும்கிட்டியதில்லை.

என்ன ஒரு இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தமிழகம் இருந்திருக்கிறது..., பின்னாளில் எப்படி ஒரு நல்ல நிலையை அடைய பாதை போடப்படுகிறது என்றெல்லாம் பார்த்த போது,நாம் எவ்வளவு அதிஷ்டம் அற்றவர்கள் என்று மனது சங்கடப்பட்டுபோகிறது.

தமிழன் எப்போதுமே துரதிர்ஷ்டகாரன் தானே....! அவனுக்கு எது தான் தொடர்ந்து கிடைத்தது? அவரது ஆட்சியின் கீழ் வாழ தமிழ் நாட்டுக்கு கொடுத்துவைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
என்ன ஒரு அடக்கம், என்னவொரு மிடுக்கு, கம்பீரம், பேசும் போது என்ன ஒரு சிக்கனமான தெளிவான வார்த்தை பிரயோகம்...,அப்பப்பா!

காங்கிரசில் இருந்த அத்தனை பேரும் அவருக்கு தந்த மரியாதை. தான் வாழ்ந்த முறை இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது தமிழன் தான் உண்மையான அரசியலுக்கும், தலைமைத்துவத்துக்கும் முன்னோடி என்றால் மிகையாகாது. உலகில் எவ்வளவோ அரசியல் சித்தாந்தங்கள், கொள்கைகள், உருவாக்கியுள்ளன,இதை உருவாக்கியவர்கள் கூட இப்படி வாழ்ந்தார்களா எனபது சந்தேகமே!.

இந்த படத்தை தயாரித்தவர் உண்மையில் பாராட்டுக்குறியவர், இந்த மாதிரியான படங்களை அடிக்கடி எல்லா தமிழரும் பார்க்கும் படி செய்ய வேண்டும். எல்லா தமிழ் தொலைகாட்சி நிலையங்களும் இந்த படத்தை காட்ட முனையவேண்டும். அப்போது தான் வரும் எதிர்கால சமுதாயத்தில் முளைக்க கூடிய அரசியல் தலைகள் தரமுள்ளதாக அமையும்.

அப்போது தான் மீண்டும் தமிழன் தலைநிமிர்வான்.

கருத்துகள் இல்லை: